பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் கல்குவாரிகளை ஆய்வு செய்யவேண்டும்: எஸ்.சந்திரன் எம்எல்ஏ கலெக்டரிடம் மனு
2022-06-08@ 01:05:11

திருவள்ளூர்: கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸிடம் திருத்தணி தொகுதி எம்எல்ஏ எஸ்.சந்திரன் தொகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தரக்கோரி மனு கொடுத்தார். அதன் விவரம் வருமாறு:திருத்தணி தொகுதிக்குட்பட்ட உயர்நிலை பள்ளிகளை மேல்நிலை பள்ளிகளாகவும், நடுநிலை பள்ளிகளை உயர்நிலை பள்ளிகளாகவும் தரம் உயர்த்தி தரவேண்டும். பள்ளி மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்ட நபார்டு உலக வங்கி நிதி உதவி மூலம் நிதி ஒதுக்கீடு செய்து தரவேண்டும். தொகுதியில் பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வரும் கல்குவாரிகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இருளர் இன மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். பஸ் வசதி இல்லாத கிராமங்களுக்கு பஸ் வசதி ஏற்படுத்தி தரவேண்டும். அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் வசதி, சாலை வசதி, மின் விளக்கு வசதி உள்பட பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் இதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
மேலும் செய்திகள்
போக்குவரத்தை சீரமைக்க சிசிடிவி கேமரா பொருத்தும் பணி துவக்கம்
வேலூர் கீழ்மொணவூர் சர்வீஸ் சாலையோரம் குப்பை, மருத்துவ கழிவுகளுடன் இறந்து கிடந்த கன்றுக்குட்டி வீச்சு
அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் வரும் கல்வியாண்டிற்கான புத்தகப்பைகள் வந்திறங்கின-பெற்றோர், மாணவர்கள் பெரும் வரவேற்பு
காஞ்சி குடிக்காடு அரசு விதை பண்ணையில் ட்ரோனில் உளுந்துக்கு மருந்து தெளிக்கும் பணி
கள்ளக்குறிச்சியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க முக்கிய சாலை ஒருவழிப்பாதையாக மாற்றம்
நீலகிரியில் 64 ரேஷன் கடைகளுக்கு ஐஎஸ்ஓ சர்வதேச தரச்சான்று
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!