டொமினிக்கன் குடியரசில் பதற்றம்!: நெருங்கிய நண்பராலேயே அலுவலகத்தில் வைத்து அமைச்சர் சுட்டுக்கொலை..!!
2022-06-07@ 15:50:55

சண்டோ டொமினிக்கோ: டொமினிக்கன் குடியரசில் அமைச்சர் ஒருவர் தனது அலுவலகத்தில் வைத்து நெருங்கிய நண்பராலேயே சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரீபியன் தீவு நாடுகளில் டொமினிக்கன் குடியரசு நாட்டில் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்கள் துறை அமைச்சராக பணியாற்றி வந்தவர் ஓர்லாண்டோ ஜோர்ச் மீரா. திங்களன்று இவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி அலுவலகத்தின் செய்தி தொடர்பாளர் திங்கட்கிழமை பிற்பகல் ட்விட்டரில் வெளியிட்ட வீடியோவில், மிகுவல் ஃகுருஸ் என அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக கூறினார்.
குருஸ் அமைச்சரின் குழந்தைப்பருவ நண்பர் என்றும் தெரிவித்தார். மீரா 35 வயதான வழக்கறிஞர், 2002 முதல் 2006 வரை பதவியில் இருந்த முன்னாள் அதிபர் சால்பட்டா ஜார்ஜ் பிளக்கோவின் மகன் ஆவார். அவருக்கு பார்டிசியா செல்மா மில்கோலஸ் என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். ஓர்லாண்டோ ஒரு வழக்கறிஞர் மற்றும் நவீன புரட்சிகர கட்சியில் உறுப்பினராக இருந்தவர். இவர் கடந்த ஆகஸ்ட் 2020ல் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
மேலும் செய்திகள்
மசூதி குண்டுவெடிப்பில் 100 பேர் பலி: இந்தியாவில் கூட இப்படி நடப்பதில்லை! பாகிஸ்தான் அமைச்சர் வேதனை
கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் ஊழியர்களுக்கு போனஸை வாரி வழங்கிய சீன நிறுவனம்
அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் கடும் உறைபனி: வெள்ளியை உருக்கி ஊற்றியது போல காட்சியளிக்கும் மரங்கள்
ஊழியர்களுக்கு கோடிகளில் போனஸ் வழங்கிய சீன நிறுவனம்: லாபம் பெருகியதை அடுத்து ரொக்கமாகவே போனஸ்
பாலியல் வழக்கில் சிக்கிய நேபாள முன்னாள் கிரிக்கெட் கேப்டன்: மீது விதித்த தடையை நீக்க முடிவு
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67.51 கோடியாக அதிகரிப்பு
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!