பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான இம்ரான் கானைக் கொல்ல சதித் திட்டம்? இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவால் பதற்றம்
2022-06-05@ 21:45:57

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானைக் கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக வெளியான செய்தியை அடுத்து, இஸ்லாமாபாத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பதவியில் இருந்து நீக்கப்பட்ட பாகிஸ்தான முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ஆளும் கூட்டணி அரசுக்கு எதிராக மக்களை திரட்டி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார். அதனால் சில இடங்களில் அசம்பாவிதங்கள் நடைபெற்று வருகின்றன. இஸ்லாமாபாத்தில் ஏற்கனவே 144 தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் இம்ரான் கானைக் கொல்ல சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக நாடு முழுவதும் வதந்திகள் பரவிவருகின்றன. இந்நிலையில் நேற்றிரவு இஸ்லாமாபாத் காவல்துறை வெளியிட்ட பதிவில், ‘பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ) தலைவர் இம்ரான் கான் இஸ்லாமாபாத்தில் அமைந்துள்ள பானி காலா என்ற குடியிருப்பு பகுதிக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது. அதனால் அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.
மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி எந்தக் கூட்டமும் கூட அனுமதியில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இம்ரான் கானின் உறவினர் ஹசன் நியாசி கூறுகையில், ‘இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து உள்ளது. அவ்வாறு ஏதேனும் நடந்தால், அது பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலாக கருதப்படும்’ என்றார். முன்னதாக இம்ரான் கானின் கட்சித் தலைவர் ஃபவாத் சவுத்ரி கூறுகையில், ‘பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானைக் கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு முகமைகள் தெரிவித்துள்ளன’ என்று தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
இலங்கையின் 75வது சுதந்திர தினம் கறுப்பு நாளாக அனுசரிக்கும் தமிழ் மக்கள்: கடையடைப்பு, போராட்டத்தால் பரபரப்பு
பாகிஸ்தான் முன்னாள் அதிபரும், அரசியல்வாதியான பர்வேஸ் முஷாரப் உடல் நலக்குறைவால் துபாயில் காலமானார்
அமெரிக்க வான்பரப்பில் பறந்த சீன உளவு பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவிப்பு: அதிபர் ஜோ பைடன் பாராட்டு
மெல்ல மெல்ல குறையும் கொரோனா: உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 67.61 கோடியாக அதிகரிப்பு.! 67.71 லட்சம் பேர் உயிரிழப்பு
மேகாலயாவில் 5 ஆண்டுகளில் 5 லட்சம் வேலைவாய்ப்புகள்முதல்வர் கான்ராட் வாக்குறுதி
விக்கிபீடியாவை முடக்கியது பாகிஸ்தான்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!