கன்டெய்னர் டிப்போவில் விபத்து; வங்கதேசத்தில் 21 பேர் தீயில் கருகி பலி.! 450க்கும் மேற்பட்டோர் காயம்
2022-06-05@ 15:53:23

டாக்கா: வங்கதேசத்தில் உள்ள கன்டெய்னர் டிப்போவில் ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் பலியான நிலையில், 450க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். வங்கதேசம் நாட்டின் சிட்டகாங்க் அடுத்த கடம்ராசூல் பகுதியில் பிஎம் கன்டெய்னர் டிப்போ உள்ளது. இந்த டிப்போவில் நேற்றிவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் உட்பட 21 பேர் தீயில் கருகி பலியாகினர். அடுத்தடுத்த கன்டெய்னர்கள் வெடித்து சிதறியதால், 450க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்த காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்புப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து ரெட் கிரசென்ட் யூத் சிட்டகாங்கின் சுகாதார மற்றும் சேவைத் துறையின் தலைவர் இஸ்தாகுல் இஸ்லாம் கூறுகையில், ‘தீ விபத்து சம்பவத்தில் 21 பேர் பலியாகி உள்ளனர். 450க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர், குறைந்தது 350 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை தோராயமாக கணக்கிடப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது’ என்றார்.
மேலும் செய்திகள்
மசூதி குண்டுவெடிப்பில் 100 பேர் பலி: இந்தியாவில் கூட இப்படி நடப்பதில்லை! பாகிஸ்தான் அமைச்சர் வேதனை
கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் ஊழியர்களுக்கு போனஸை வாரி வழங்கிய சீன நிறுவனம்
அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் கடும் உறைபனி: வெள்ளியை உருக்கி ஊற்றியது போல காட்சியளிக்கும் மரங்கள்
ஊழியர்களுக்கு கோடிகளில் போனஸ் வழங்கிய சீன நிறுவனம்: லாபம் பெருகியதை அடுத்து ரொக்கமாகவே போனஸ்
பாலியல் வழக்கில் சிக்கிய நேபாள முன்னாள் கிரிக்கெட் கேப்டன்: மீது விதித்த தடையை நீக்க முடிவு
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67.51 கோடியாக அதிகரிப்பு
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!