பிரேசிலில் கனமழை: பலியானோர் எண்ணிக்கை 128 ஆக உயர்வு
2022-06-04@ 15:02:10

பிரசிலியா: பிரேசிலில் கனமழை பெய்து வரும் நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளது. பிரேசில் நாட்டில் வடகிழக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும் தொடர் கனமழையால் சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
பிரேசிலில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியது. அலகோவாஸ், பெர்னாம்புகோ ஆகிய இடங்கள் வெள்ளத்தால் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளது. வடகிழக்கே அமைந்துள்ள பெர்னாம்புகோ மாகாணத்தின் தலைநகர் ரீசிப்-ல் பெய்து வரும் கனமழையால் இதுவரை 128 பேர் உயிரிழந்துள்ளனர்.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மற்றும் ராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பெர்னாம்புகோவில் 34 மாநகராட்சி பகுதிகளுக்கு நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அங்கு 9,000-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளதாக கவர்னர் பவுலோ கமரா தெரிவித்துள்ளார். மேலும் கனமழையால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்கப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகள்
மசூதி குண்டுவெடிப்பில் 100 பேர் பலி: இந்தியாவில் கூட இப்படி நடப்பதில்லை! பாகிஸ்தான் அமைச்சர் வேதனை
கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் ஊழியர்களுக்கு போனஸை வாரி வழங்கிய சீன நிறுவனம்
அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் கடும் உறைபனி: வெள்ளியை உருக்கி ஊற்றியது போல காட்சியளிக்கும் மரங்கள்
ஊழியர்களுக்கு கோடிகளில் போனஸ் வழங்கிய சீன நிறுவனம்: லாபம் பெருகியதை அடுத்து ரொக்கமாகவே போனஸ்
பாலியல் வழக்கில் சிக்கிய நேபாள முன்னாள் கிரிக்கெட் கேப்டன்: மீது விதித்த தடையை நீக்க முடிவு
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67.51 கோடியாக அதிகரிப்பு
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!