சர்க்கார் விரைவு ரயிலில் 10 கிலோ கஞ்சா சிக்கியது
2022-06-03@ 01:43:08

செங்கல்பட்டு: செங்கல்பட்டு வந்த, சர்க்கார் விரைவு ரயிலில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.ஆந்திர மாநிலம் காக்கி நாடாவில் புறப்பட்டு, தினசரி சர்க்கார் விரைவு ரயில் காலையில் செங்கல்பட்டுக்கு வருவது வழக்கம். இந்நிலையில், ஆந்திராவில் இருந்து நேற்று காலை சர்க்கார் விரைவு ரயில் செங்கல்பட்டு ரயில் நிலையம் வந்தடைந்தது. இதில், கஞ்சா கடத்தி வரப்பட்டுள்ளதாக செங்கல்பட்டு ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் ராமதாஸ் தலைமையில் போலீசார் ரயிலில் சோதனை செய்தனர். அப்போது, ஒரு பெட்டியில் கிடந்த 2 தோல் பைகளில் 5 பண்டல்களாக 10 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. ரயில்வே போலீசார் அதனை கைப்பிற்றி, காஞ்சிபுரம் போதை தடுப்புப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக, அவர்கள் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மேலும் செய்திகள்
கொடைக்கானலுக்கு வரும் வெளியூர் வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் உயர்ந்தது
ரூ.784 கோடியில் பள்ளி வகுப்பறைகள் கட்டும் பணி தொடக்கம் கல்வியும், மருத்துவமும் இரண்டு கண்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
குடிநீர் தொட்டியில் இன்ஜினியர் சடலம் மீட்பு அமைச்சர், டிஐஜி நேரில் விசாரணை
தாலி கட்டும் நேரத்தில் மணமகன் ஓட்டம் மண்டபத்துக்கு வந்தவர் மாப்பிள்ளை ஆனார்
விஐடி பல்கலையில் கலைஞர் மாணவர் விடுதி, பேர்ல் ஆராய்ச்சி கட்டிடம் திறப்பு தமிழகத்தில் மாபெரும் கல்வி புரட்சி: தனியார் கல்வி நிறுவனங்களும் பங்களிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
திருப்பூரில் வட இந்தியர்கள் உள்ளூர் ஆட்களிடம் சண்டையில் ஈடுபட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் வீடியோவால் பரபரப்பு.!
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!