குப்பையில் வீசப்படும் உணவுகளில் இருந்து சிமெண்ட் உற்பத்தி :ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் சாதனை!!
2022-06-02@ 10:14:10

டோக்கியோ: ஜப்பானில் வீணாகும் உணவுகளில் இருந்து சிமெண்ட் தயாரிப்பதில் ஜப்பானில் உள்ள டோக்கியோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வெற்றி அடைந்துள்ளனர். கட்டுமானத்திற்கு முக்கியமான கான்க்ரீட் தயாரிப்பதற்கான தற்போதைய செயல்முறைகளால் சுற்றுசூழல் பாதிக்கும் வாயுக்கள் வெளியேறப்படுகின்றன. எனவே சிமெண்டுக்கு மாற்றாக சூழ்நிலைக்கு கேடு விளைவிக்காத ஒன்றை கண்டுபிடிக்க உலகம் முழுவதும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதில் வெற்றிக்கு மிக அருகில் வந்துள்ளார்கள் ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள்.
வீடுதோறும் வீணாக்கப்படும் உணவுகளில் இருந்து சிமெண்ட் தயாரிக்க முடியும் என்பதை அவர்கள் நிரூபித்துள்ளனர். வீணாக வீசப்படும் உணவுகளில் 3 நுட்பங்களை பயன்படுத்தி அவற்றை உறுதியான சிமெண்டாக மாற்ற முடியும் என்கிறார்கள் பேராசிரியர்கள். உணவுப் பொருட்கள் அழுகுவதால் சூழலை பாதிக்கும் வாயுக்கள் வெளியாகும் வெளியாவதும் இதனால் குறையும் என்பதால் புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களுக்கு முடிவு கட்ட இயலும் என்று அவர்கள் கூறினர். தற்போது இறுதி கட்டத்தில் இருக்கும் இந்த ஆராய்ச்சி விரைவில் முழுமை அடையும் என்று ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
மசூதி குண்டுவெடிப்பில் 100 பேர் பலி: இந்தியாவில் கூட இப்படி நடப்பதில்லை! பாகிஸ்தான் அமைச்சர் வேதனை
கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் ஊழியர்களுக்கு போனஸை வாரி வழங்கிய சீன நிறுவனம்
அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் கடும் உறைபனி: வெள்ளியை உருக்கி ஊற்றியது போல காட்சியளிக்கும் மரங்கள்
ஊழியர்களுக்கு கோடிகளில் போனஸ் வழங்கிய சீன நிறுவனம்: லாபம் பெருகியதை அடுத்து ரொக்கமாகவே போனஸ்
பாலியல் வழக்கில் சிக்கிய நேபாள முன்னாள் கிரிக்கெட் கேப்டன்: மீது விதித்த தடையை நீக்க முடிவு
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67.51 கோடியாக அதிகரிப்பு
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!