நேபாள விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு
2022-06-01@ 07:32:09

காத்மண்ட்: விபத்துக்குள்ளான நேபாள விமானத்தின் கருப்பு பெட்டியை மீட்புக் குழுவினர் கண்டுபிடித்தனர். நேபாளத்தில் பொகாராவில் இருந்து ஞாயிறன்று ஜோம்சாம் விமான நிலையத்திற்கு தாரா ஏர் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் புறப்பட்டது. 22 பேர் பயணித்த இந்த விமானம் புறப்பட்டு சென்ற சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. இதில் 22 பேரும் உயிரிழந்தனர். நேபாள ராணுவ வீரர்கள் உட்பட 100 பேர் அடங்கிய குழு விபத்தில் இறந்தவர்களின் உடலை மீட்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை கடைசி சடலத்தை மீட்பு குழுவினர் கண்டறிந்து மீட்டனர். ஏற்கனவே மீட்கப்பட்ட 10 சடலங்கள் மலையில் இருந்து கொண்டு வரப்பட்ட நிலையில் நேற்று மீதமுள்ள 12 சடலங்களும் காத்மாண்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனிடையே தீவிர தேடுதலுக்கு பின் கருப்பு பெட்டியை குழுவினர் மீட்டு, ஆய்வுக்காக காத்மாண்டுக்கு அனுப்பி உள்ளனர்.
மேலும் செய்திகள்
அமெரிக்க வான்பரப்பில் பறந்த சீன உளவு பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவிப்பு: அதிபர் ஜோ பைடன் பாராட்டு
மெல்ல மெல்ல குறையும் கொரோனா: உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 67.61 கோடியாக அதிகரிப்பு.! 67.71 லட்சம் பேர் உயிரிழப்பு
மேகாலயாவில் 5 ஆண்டுகளில் 5 லட்சம் வேலைவாய்ப்புகள்முதல்வர் கான்ராட் வாக்குறுதி
விக்கிபீடியாவை முடக்கியது பாகிஸ்தான்
75வது சுதந்திர தின கொண்டாட்டம் இலங்கை தனது தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும்: அதிபர் ரணில் வலியுறுத்தல்
இஸ்ரோ-நாசா இணைந்து உருவாக்கிய நிசார் செயற்கைக்கோளை இந்தியாவுக்கு அனுப்ப தயார்: சம்பிரதாயப்படி அமெரிக்காவில் தேங்காய் உடைத்து வழியனுப்பல்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!