பல்லடத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத் திறப்பு விழா
2022-05-28@ 12:44:29

பல்லடம் : பல்லடத்தில் கடந்த 2020- ம் ஆண்டு ரூ.5.50 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டப்பட்டுள்ளது. இதில் நீதிபதி அறைகள், எழுத்தர் அறை, நூலகம், பதிவறை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் இரண்டு அடுக்கு தளங்களுடன் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டிடத்தை சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி ரிப்பன் வெட்டி நேற்று திறந்து வைத்து நீதி மன்ற வளாகத்தை பார்வையிட்டார்.
முன்னதாக மாவட்ட முதன்மை நீதிபதி சொர்ணம் நடராஜன் வரவேற்றார். இதில் உயர்நீதி மன்ற நீதிபதிகள் கிருஷ்ணகுமார்,சுந்தர்,ஆஷா, கல்யாணசுந்தரம், அமைச்சர்கள் ரகுபதி,கயல்விழி, மாவட்ட கலெக்டர் வினீத், எஸ்.பி. செஷாங் சாய் உள்பட பலர் பங்கேற்றனர். விழாவில் திருப்பூர் மாநகராட்சி 4 வது மண்டல தலைவர் இல.பத்மநாபன், பல்லடம் ஊராட்சி ஒன்றிய தலைவர் தேன்மொழி, துணைத்தலைவர் பாலசுப்பிரமணியம், பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார், செம்மிபாளையம் ஊராட்சி தலைவர் ஷீலா புண்ணியமூர்த்தி, மடத்துக்குளம் முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயராமகிருஷ்ணன், பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் வழக்கறிஞர் குமார்,பல்லடம் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பாலசுப்பிரமணியம், செயலாளர் சக்திவேல், உடுமலை வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஸ்ரீரீதர், செயலாளர் முருகானந்தம் உள்பட பலர் பங்கேற்றனர். முடிவில் மாவட்ட தலைமை கூடுதல் நீதிபதி புகழேந்தி நன்றி கூறினார்.விழாவில் உடுமலை கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் திறப்பு விழாவும் பெற்றது.
மேலும் செய்திகள்
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பெட்ரோல் பங்க் பின்புறம் அமராவதி ஆற்றுப் படுகையில் தீ விபத்து
அதானி ஊழல் செய்தது குறித்து பேசினால் தேசத்துக்கு எதிராக பேசுவதாக கூறுகின்றனர்: மதுரையில் கே.எஸ்.அழகிரி பேட்டி
இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 6 பேரை கைது செய்தது இந்திய கடலோர காவல் படை
கோவை சாலைத்தடுப்பில் இருசக்கர வாகனம் மோதி விபத்து: சட்டகல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 1000 பேருக்கு பணி நியமன ஆணை: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்
சனாதன இந்து தர்ம எழுச்சி மாநாடு நடத்த அனுமதி கோரிய வழக்கின் மனுவை தள்ளுபடி செய்தது: ஐகோர்ட் கிளை
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!
பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!
புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்
சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!