செங்கத்தில் இருந்து புதுச்சேரிக்கு கடத்திய 10 கிலோ சந்தன கட்டை பறிமுதல்: வாலிபர் கைது
2022-05-27@ 18:40:15

விக்கிரவாண்டி: செங்கத்தில் இருந்து புதுச்சேரிக்கு கடத்திய 10 கிலோ சந்தன கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் ஒருவரை கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த பனையபுரம் தொரவி செல்லும் சாலையில் விக்கிரவாண்டி சப்- இன்ஸ்பெக்டர் தேவரத்தினம் தலைமையிலான போலீசார் இன்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அதிகாலை சுமார் 5 மணி அளவில் தொரவி அருகே இருசக்கர வாகனத்தில் சந்தேகத்துக்குரிய மர்ம நபர் நின்று கொண்டிருப்பதை போலீசார் அறிந்து அவரிடம் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் அந்த வாலிபர் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியைச் சேர்ந்த சின்னகிருஷ்ணன் (44) என்பதும் அவர் செங்கம் பகுதியில் இருந்து இருசக்கர வாகனத்தில் சுமார் 10 கிலோ எடைகொண்ட சந்தனக்கட்டையை புதுச்சேரிக்கு கடத்திச் சென்றதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து விக்கிரவாண்டி போலீசார் அந்த வாலிபரை கைது செய்து, சந்தனக்கட்டையை எப்படி கிடைத்தது, யாரெல்லாம் கூட்டாளிகள் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட சந்தன கட்டைகளை வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
மேலும் செய்திகள்
சர்ச்சுக்கு வந்த சிறுவனை மிரட்டி ஓரினச்சேர்க்கை: பாதிரியார் கைது
அம்பானி குடும்பத்துக்கு கொலை மிரட்டல்: ஒருவர் கைது
பல்லடத்தில் நள்ளிரவு துணிகரம்: ஏடிஎம் இயந்திரத்தை பெயர்த்து எடுக்க முயன்ற கொள்ளையர்
தனியார் வங்கியில் 31.7 கிலோ தங்க நகைகள் கொள்ளை கும்பல் தலைவன் முருகன் அதிரடியாக கைது; 32 மணி நேரத்தில் 4 பேர் கைது: 18 கிலோ தங்க நகைகள் மீட்பு
ஸ்ரீரங்கம் பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என பேச்சு; சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் கைது: போலீசுக்கு பயந்து 13 நாள் புதுச்சேரியில் பதுங்கல்
அரும்பாக்கம் வங்கியில் கொள்ளை நடந்த 72 மணி நேரத்தில் 4 குற்றவாளிகளை கைது செய்து போலீஸ் அதிரடி..!
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!