நான் செலவு செய்தால்தான் ரசிகர்களும் செலவு செய்வார்கள்: கமல்ஹாசன் பேட்டி
2022-05-26@ 00:13:57

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் நடித்துள்ள ‘விக்ரம்’ படம், வரும் ஜூன் 3ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்துக்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்நிலையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கமல்ஹாசன் கூறியதாவது: நான் சினிமாவின் ரசிகன். அதனால்தான் நல்ல படம் எடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் படம் தயாரிக்கவும் ஆரம்பித்தேன். ‘விக்ரம்’ படத்தை ஒரு நல்ல படமாக தயாரித்துள்ளேன். இதற்கு முன்பு நான் நடித்து தயாரித்த படங்களின் மூலம் கிடைத்த பணம் முழுவதையும் சினிமாவுக்கே செலவு செய்தேன். ஆனால், சிலர் லாபமாக வரும் பணத்தைக் கொண்டு ஓட்டல் கட்டலாம், மால் கட்டலாம் என்று ஆலோசனை சொன்னார்கள். ஒரு விவசாயி தன் பணத்தை நிலத்தில் முதலீடு செய்வது போலவே நான் சினிமாவில் முதலீடு செய்தேன்.
ஆனால், இப்போது என் பணத்தை மக்களுக்காகவும் முதலீடு செய்ய வேண்டியது இருக்கிறது. நலப்பணிகளுக்கு நான் ஒரு ரூபாய் செலவு செய்தால்தான், எனது ரசிகன் 20 ரூபாய் செலவு செய்வான். அதற்காகத்தான் படங்களில் நடிக்கிறேன். 1,000 படங்களில் நடிக்க ஆசை இருந்தாலும், என்னால் இயன்றவரை தொடர்ந்து படங்களில் நடிப்பேன். அதற்கான அறிவிப்பு அவ்வப்போது வெளியாகும். ‘இந்தியன் 2’ படம் கண்டிப்பாக வெளியாகும். அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இவ்வாறு கமல்ஹாசன் கூறினார். பேட்டியின் போது லோகேஷ் கனகராஜ் உடனிருந்தார்.
Tags:
I will cost fan cost Kamalhasan interview நான் செலவு ரசிகர் செலவு செய்வார்கள் கமல்ஹாசன் பேட்டிமேலும் செய்திகள்
கோவளம் ஒருங்கிணைந்த வடிகால் திட்டத்துக்கு ஆணையம் அனுமதி
சென்னையில் உள்ள ஒன்றிய, மாநில அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் கோலாகலம்; அதிகாரிகள் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை
இந்தாண்டு சிறப்பு தணிக்கை மூலம் அரசுக்கு ரூ.158 கோடி வருவாய்; ஜிஎஸ்டி மண்டல தலைமை ஆணையர் தகவல்
மண்டல வருமான வரித்துறையில் ரூ.1 லட்சம் கோடி வரி வசூல்; தலைமை ஆணையர் பேச்சு
நடப்பு ஆண்டில் ஐசிஎப் சார்பில் 3,500 ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படும்; பொது மேலாளர் தகவல்
6 வருடங்களுக்கு பிறகு ரிப்பன் மாளிகையில் தேசிய கொடி ஏற்றம்; மேயர் பிரியா தலைமையில் நடந்தது
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!