சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காணாமல் போன ஒன்றரை வயது ஆண் குழந்தை: 1 மணி நேரத்தில் பெற்றோரிடம் ஒப்படைத்த ரயில்வே காவல்துறையினர்.
2022-05-25@ 16:03:25

சென்னை: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள் வினோத்குமார் - லதா தம்பதியினர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் ருத்விக் என்ற மகன் உள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் வினோத் தனது குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்று தனது மகனுக்கு மொட்டை அடித்து நேர்த்திகடன் செலுத்திவிட்டு சென்னை திரும்பினர். இதையடுத்து மீண்டும் விசாகப்பட்டினம் செல்வதற்காக, இன்று அதிகாலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தனர். அப்போது திடீரென ஒன்றரை வயது மகன் ருத்விக் காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதைத் தொடர்ந்து உடனே ரயில்வே மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரிடம் குழந்தை காணாமல் போனது குறித்து தெரிவித்துள்ளனர். உடனே போலீசார் ரயில் நிலையத்தில் தவறவிட்ட குழந்தையை மீட்க அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வழிதவறி சென்ற குழந்தையை 1மணி நேரத்தில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
மேலும் செய்திகள்
பிரபல செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணசுவாமி காலமானார்
ஓங்கூர் பாலம் சீரமைப்பு பணி, தொடர் விடுமுறை சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
தென் சென்னை கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உட்பட 5 அதிகாரிகளுக்கு முதல்வர் பதக்கம்
தாம்பரத்தில் ரூ.48 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் திறப்பு தமிழகம் சிறந்த மாநிலமாக திகழ்கிறது: ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் பேச்சு
தமிழகத்தில் நடந்த லோக் அதாலத்தில் 78 ஆயிரம் வழக்குகளில் தீர்வு: ரூ.440 கோடி பைசல்
சொந்தமாக தொழில் தொடங்குவதில் உள்ள நன்மைகள் என்ன? 17ம் தேதி முகாம்
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!