லாரி மீது பைக் மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு
2022-05-25@ 14:53:55

திருப்பதி: சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில் லாரி மீது பைக் மோதிய விபத்தில் லாரி தீப்பிடித்து எரிந்தது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் அருகே பஞ்சாப் மாநிலத்தில் இருந்து சரக்கு ஏற்றி வந்த லாரி, எதிரே வந்த பைக் மீது மோதியதில் தீப்பிடித்து எரிந்தது.
லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் விபத்திலிருந்து தப்பி, விபத்து குறித்து தகவல் அளித்ததன் பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விபத்து ஏற்பட்ட பகுதிக்கு உடனடியாக விரைந்து சென்று ஒருமணி நேரத்திற்கு பின்னர் லாரியில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த 2 இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தின் காரணமாக சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகள்
நாங்கள் நெருக்கமாக இருந்தால் டேட்டிங்கா?: நடிகருடனான உறவு குறித்து நடிகை பதில்
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கேரள ராணுவ கேப்டன் சடலம் மீட்பு: மனைவியை பார்த்துவிட்டு திரும்பிய போது சோகம்
ஜனாதிபதியின் செயலராக ஒடிசா கேடர் அதிகாரி நியமனம்
அவர் ஒரு அப்பாவி; நிரபராதி; ஜாக்குலினின் இமேஜை கெடுக்கின்றனர்!: அமலாக்கத்துறை மீது பகீர் குற்றச்சாட்டு
டோலோ650 மாத்திரை தயாரிக்கும் நிறுவனம் மருத்துவர்களுக்கு இலவசப் பொருட்களை வழங்கியுள்ளதாக இந்திய மருத்துவம் மற்றும் விற்பனை கூட்டமைப்பு உச்ச நீதிமன்றத்தில் தகவல்
மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு கட்டண பாக்கி: 13 மாநிலங்களுக்கு இடையே மின்சாரத்தை பகிர்ந்து கொள்ள தடை...
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...