பணியாளர்களுக்கு இருக்கை வசதி செய்து தராத 112 கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை: தொழிலாளர் நலத்துறை ஆணையம் தகவல்
2022-05-25@ 00:02:46

சென்னை: பணியாளர்களுக்கு இருக்கை வசதி செய்து தராத 112 கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு சட்டப்படியான அறிவிப்பு வழங்கி மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சென்னை-2ம் வட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சுபாஷ் சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை-2ம் வட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சுபாஷ் சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் பணியிடத்தில் இருக்கை வசதி செய்து தர வேண்டும் என்று அறிவிப்பு செய்ததை தொடர்ந்து இது தொடர்பாக கடந்த ஏப்ரல் 10ம் தேதியன்று அரசிதழில் வெளியிடப்பட்டு சட்டமாக்கப்பட்டது.
அதனை ெதாடர்ந்து தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர், செயலாளர் மற்றும் ெதாழிலாளர் ஆணையர்இ சென்னை கூடுதல் தொழிலாளர் ஆணையர், ெதாழிலாளர் இணை ஆணையர்-1 ஆகியோரது அறிவுரைகளுக்கிணங்க கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு இருக்கை வசதி செய்துதர தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் சென்னை 2ம் வட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலக நிர்வாக எல்லையில் தொழிலாளர் துணை ஆய்வாளர்கள், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு கூட்டாய்வில் பணியாளர்களுக்கு இருக்கை வசதி செய்து தராத 112 கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு சட்டப்படியான அறிவிப்பு வழங்கி மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும்பணியிடத்தில் இருக்கை வசதி செய்து தர வேண்டும்.
மேலும் செய்திகள்
கண்காணிப்பு மற்றும் முன்னறிவிப்பு சேவைகளை மேம்படுத்துவதற்காக புதிதாக 10 இடங்களில் தானியங்கி மழை அளவீடு: இந்திய வானிலை ஆய்வு மையம் திட்டம்
சென்னை அரும்பாக்கம் ஃபெடரல் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட 31.700 கிலோ கிராம் நகைகள் மீட்பு: காவல்துறை தகவல்...
சென்னை மாநகராட்சியில் வார்டு அளவிலான நீர் மேலாண்மையை ஆய்வு செய்ய திட்டம்: இதுவரை 10,000 சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகள் துண்டிப்பு
சென்னை தினத்தை முன்னிட்டு பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை சாலையில் 2 நாட்கள் பிரமாண்ட கலை நிகழ்ச்சி...
சென்னை அரும்பாக்கம் வங்கி கொள்ளை வழக்கில் தங்க நகைகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்த அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்
இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் மறைவு; அரசியல் தலைவர்கள் இரங்கல்
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...