புதர்மண்டி கிடக்கும் கால்வாய் படையெடுக்கும் பாம்புகளால் பர்மா காலனி மக்கள் அச்சம்
2022-05-24@ 18:17:38

சிவகாசி: சிவகாசி அருகே பர்மா காலனியில் புதர்மண்டி கிடக்கும் கழிவுநீர் கால்வாயில் இருந்து பாம்புகள் படையெடுப்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். சிவகாசி அருகே நாரணாபுரம் ஊராட்சியில் பர்மா காலனி உள்ளது. 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். மெயின் ரோட்டில் இருந்து காலனிக்குள் செல்லும் நுழைவு பகுதியில் மழைநீர் செல்லும் கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் பராமரிப்பு இல்லாததால் புதர்மண்டி உள்ளது. இங்குள்ள வீடுகளில் முறையான கழிவுநீர் சேகரிப்பு தொட்டி இல்லை. இங்கு அமைந்துள்ள பெரும்பாலான குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நேரடியாக மழைநீர் கால்வாய்கள் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதியில் அதிக அளவில் கொசு உற்பத்தியாகி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
தற்போது இந்த கால்வாய் பராமரிப்பு இல்லாமல் பல இடங்களில் புதர் மண்டியும், குப்பைகளால் அடைபட்டும் காணப்படுகிறது. கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. புதர்மண்டி கிடக்கும் கால்வாய் பகுதியில் இருந்து பாம்புகள் குடியிருப்பு பகுதியில் புகுந்து வருவதால் மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். எனவே, பொதுமக்களின் நலன் கருதி, கழிவுநீர் கால்வாய்களை ஊராட்சி நிர்வாகம் விரைந்து சீரமைக்க வேண்டும். மேலும், கழிவுநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், புதை சாக்கடை திட்டத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
இடைக்கழிநாடு பேரூராட்சியில் மழைநீர் வடிகால்வாயில் கழிவுகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ஊராட்சி தலைவர்களுக்கு பயிற்சி
மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கடப்பாரையால் அடித்து கொலை செய்த கணவன் போலீசில் சரண்
கும்மிடிப்பூண்டி அருகே மாதர்பாக்கம் ஊராட்சியில் டவர் அமைக்க எதிர்ப்பு; இடத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
6 வழிச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகளுடன் விவசாய சங்க மாநில தலைவர் கலந்துரையாடல்; நீதமன்றத்தில் வழக்கு தொடர முடிவு
அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் போதை பழக்கத்திற்கு எதிராக மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!