கோவில்பட்டியிலிருந்து கேரளாவுக்கு கடத்த இருந்த 5 டன் ரேஷன் அரிசி, மாவு பறிமுதல்
2022-05-24@ 18:16:53

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியிலிருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக எஸ்.பி. பாலாஜி சரவணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் கோவில்பட்டி கிழக்கு இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் தலைமையில் எஸ்ஐக்கள் தர்மராஜ், மாதவராஜ் மற்றும் போலீசார் பூரணம்மாள் காலனியில் உள்ள ரைஸ் மில்லில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ஒரு டன் ரேஷன் அரிசி மூடைகளாகவும், மாவாகவும் வைக்கப்பட்டு, கேரளாவுக்கு லாரியில் ஏற்ற தயார் நிலையில் இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த ஒரு டன் ரேஷன் அரிசி மற்றும் மாவு மூடைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.இதனை கடத்த முயன்ற கோவில்பட்டி, பூரணம்மாள் காலனியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் சிவா (25), அதே ஊர் வள்ளுவர் நகரைச் சேர்ந்த சின்ன கருப்பசாமி மகன் மகாராஜா (18), வடக்கு திட்டங்குளத்தைச் சேர்ந்த கன்னிச்சாமி மகன் மற்றொரு மகாராஜா (40) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
இதேபோல் கோவில்பட்டி மேற்கு இன்ஸ்பெக்டர் கிங்ஸிலிதேவ்ஆனந்த் தலைமையில் எஸ்ஐ அரிகண்ணன் மற்றும் போலீசார், ஊரணி தெருவில் ஒரு குடோனில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு கேரளாவுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த 4 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கோவில்பட்டி, ஊரணி தெருவைச் சேர்ந்த முத்துமாரியப்பன் (31) என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மற்றும் மாவு மூடைகளை, தூத்துக்குடி மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் கோவில்பட்டி போலீசார் ஒப்படைத்தனர். கோவில்பட்டியிலிருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்
வருமானத்துக்கு அதிகாமாக 315% சொத்து குவித்ததாக வழக்கு: அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி சோதனை
இடைக்கழிநாடு பேரூராட்சியில் மழைநீர் வடிகால்வாயில் கழிவுகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ஊராட்சி தலைவர்களுக்கு பயிற்சி
மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கடப்பாரையால் அடித்து கொலை செய்த கணவன் போலீசில் சரண்
கும்மிடிப்பூண்டி அருகே மாதர்பாக்கம் ஊராட்சியில் டவர் அமைக்க எதிர்ப்பு; இடத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
6 வழிச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகளுடன் விவசாய சங்க மாநில தலைவர் கலந்துரையாடல்; நீதமன்றத்தில் வழக்கு தொடர முடிவு
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!