குடந்தை கோயிலில் 10, 14ம் நூற்றாண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு
2022-05-24@ 18:16:00

தஞ்சை: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாலுகா அசூர் தான்தோன்றிஸ்வரர் கோயிலில் 10ம் நூற்றாண்டு எழுத்தமைதி கொண்ட சோழர் காலக் கல்வெட்டும், 14ம் நூற்றாண்டு எழுத்தமைதி கொண்ட பாண்டியர் காலக் கல்வெட்டும் கண்டறியப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுக் குறித்து சரஸ்வதி மகால் நூலக நூல் விற்பனைப்பிரிவு எழுத்தர் நேரு அளித்த தகவலின்படி, ஆசூரைச் சேர்ந்த ரவி, கருப்பையன், ராமச்சந்திரன், கவுதமன் ஆகியோர் உதவியுடன் தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரி தமிழ்த்துறை உதவி பேராசிரியர் கண்ணதாசன் உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் இக்கோயில் கல்வெட்டுகளை படியெடுத்து ஆய்வு மேற்கொண்டனர்.
இதுபற்றி அவர்கள் கூறுகையில், 10ம் நூற்றாண்டு கல்வெட்டில் சொற்கள் இரண்டிரண்டாக கொண்ட ஐந்து வரிகளில் உள்ளன. நிலம், காவிதி, புத்தூர், அறுநாழி, சோழன் என்னும் சொற்கள் மட்டுமே வாசிக்கும் நிலையில் காணப்படுகின்றன. மற்றொரு கல்வெட்டு சிறிது சிதைந்துள்ளது. இதில் கீழசுகூர் சபையைப் பற்றியும், இறைவன் பெயர் தான்தோன்றிஸ்வரர் என்பதில் …ன்றி மஹாதேவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரகாரம் எனப்படும் திருசுற்று புதியதாக அமைக்கப்பட்டது எனவும் இவ்விறைவருக்கு வழங்கப்பட்ட நிலமும், அதன் எல்லைகளும் குறிக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டில் கீ என்னும் உயிர்மெய் நெட்டெழுத்து காணப்பெறுவது எழுத்து வளர்ச்சியில் சிறப்பு வாய்ந்ததாகும் என்றனர்.
மேலும் செய்திகள்
கோவை நகைக்கடையில் ரூ.55 லட்சம் நகை மோசடி ‘ஆன்லைன் ரம்மி’யில் இழந்த சூபர்வைசரிடம் விசாரணை
குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பரிந்துரைப்படி பள்ளிகளில் தொடர்ந்து தவறு செய்யும் மாணவர்களுக்கு நூதன தண்டனை; பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்
கி.மு. 300 முதல் 10-ம் நூற்றாண்டு வரையிலான பல்வேறு காலகட்டங்களில் உருவானது கீழடி நகரம்; மத்திய தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தகவல்
கருமுட்டை விவகாரத்தில் ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு ‘சீல்’
பலகோடி மோசடி செய்த உரிமையாளர்கள் தலைமறைவு; ஐஎப்எஸ் நிதி நிறுவன ஏஜென்ட் தற்கொலை காட்பாடி அருகே சோகம்
1.30 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு காவிரி ஆற்றில் தொடரும் வெள்ளப்பெருக்கு
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!