இந்தியா- அமெரிக்கா இடையேயான ஒத்துழைப்பு நம்பிக்கை அடிப்படையிலானது: குவாட் அமைப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
2022-05-24@ 16:30:40

டோக்கியோ: இந்தியா- அமெரிக்கா இடையேயான ஒத்துழைப்பு நம்பிக்கை அடிப்படையிலானது என்று பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்திருக்கிறார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற குவாட் அமைப்பு மாநாட்டில் பங்கேற்ற பின் பிரதமர் மோடி பேட்டியளித்தார். அப்போது பேசிய பிரதமர், இன்று நடைபெற்ற குவாட் மாநாடு ஆக்கபூர்வமானதாக, பயனுள்ளதாக இருந்தது. இரு நாடுகளின் பொதுவான நலன்களும், விழுமியங்களும் இரண்டுக்கும் இடையிலான உறவு பலப்படுத்தி உள்ளது. இந்தோ - பசுபிக் பிராந்தியம் தொடர்பாகவும், இந்தியா - அமெரிக்கா இடையே ஒருமித்த கருத்து நிலவுகிறது என்று குறிப்பிட்டார்.
இந்தோ - பசுபிக் பிராந்திய நாடுகளின் பொது நலன்களை பாதுகாக்கும் நடவடிக்கைகள் வேகமடையும் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார். இந்தியா- அமெரிக்கா இடையேயான பொருளாதார ஒத்துழைப்பு, மக்கள் இடையேயான தொடர்பால் இரு நாட்டு உறவு சிறப்பு பெறுகிறது. இந்தியா- அமெரிக்கா இடையே வர்த்தகம் மற்றும் முதலீடுகளும் சீராக அதிகரித்து வந்தபோதிலும் மேலும் வளர வாய்ப்புள்ளது. அமெரிக்க முதலீட்டு ஊக்குவிப்பு ஒப்பந்தம் அமலுக்கு வந்ததும் இரு நாடுகளுக்கும் இடையே முதலீடு அதிகரிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
மேலும் செய்திகள்
ஆப்கானிஸ்தானில் பயங்கரம்: மசூதியில் குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 35 ஆனது
10 குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு ரூ.13 லட்சம் பரிசு!: மக்கள் தொகையை பெருக்க அதிபர் புதின் அதிரடி அறிவிப்பு..!!
கார்கிவ் நகரில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 3 பேர் பலி; 10 பேர் காயம்
சீனாவில் பிறப்பு விகிதம் கடும் சரிவு!: அதிக குழந்தை பெறும் தம்பதிகளுக்கு வரிகள் தள்ளுபடி.. சீன அரசு அதிரடி அறிவிப்பு..!!
ஏவுகணைகளை அடுத்தடுத்து சோதிக்கும் வடகொரியா: ஒரே நாளில் 2 ஏவுகணைகளை செலுத்தி பரிசோதனை
உலகம் முழுவதும் தீவிரமாக பரவும் குரங்கம்மை; 35,000 பேர் பாதிப்பு!: தடுப்பூசிகளின் தேவை பன்மடங்கு அதிகரிப்பு.. WHO எச்சரிக்கை..!!
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...