விபத்துகளை தடுக்க நெடுஞ்சாலையில் வேகத்தடைகளுக்கு வர்ணம் பூசும் பணி: அதிகாரிகள் ஆய்வு
2022-05-24@ 00:04:38

திருத்தணி: மாநில நெடுஞ்சாலையில் வேகத்தடையால் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் வகையில் வெள்ளை வண்ணம் பூசும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.திருத்தணி - சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில் சாலை விபத்துகளை தடுக்கவும், அதிவேகமாக செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்தும் வகையில், 20க்கும் மேற்பட்ட இடங்களில் நெடுஞ்சாலைத்துறையினர் வேகத்தடைகள் வைத்துள்ளனர். அதாவது, பஸ் நிறுத்தங்கள் மற்றும் மக்கள் அதிகளவில் சாலையை கடக்கும் இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், வாகன ஓட்டிகள் வேகத்தடை உள்ளது என அறியும் வகையில், நெடுஞ்சாலை துறையினர் வேகத்தடை அருகே எச்சரிக்கை அறிவிப்பு பலகை மற்றும் வெள்ளை வண்ணம் பூசப்பட்டுள்ளது.
இதுதவிர, வேகத்தடை அருகே ‘ரிப்பிளக்டர்’ (ஒளிரும் விளக்குகள்) அமைக்கப்பட்டுள்ளன. கடந்த இரு நாட்களுக்கு முன் எல்.ஐ.சி. உதவி மேலாளர் ஒருவர் பீரக்குப்பம் பஸ் நிறுத்தத்தில் வேகத்தடை உள்ளதை கவனிக்காமல் அதிவேகமாக சென்றால் விபத்து ஏற்பட்டு பலியானார். இதையடுத்து நேற்று திருத்தணி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கார்த்திகேயன், உதவி பொறியாளர் பிரபாகரன் ஆகியோர் நேரில் சென்று இடத்தை பார்வையிட்டு, மீண்டும் வேகத்தடைகளுக்கு வெள்ளை வர்ணம் பூசுவதற்கு ஊழியர்களுக்கு உத்தரவிட்டனர். தொடர்ந்து திருத்தணி - சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில் உள்ள அனைத்து வேகத்தடைகளுக்கு வர்ணம் பூசும் பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகிறது.
மேலும் செய்திகள்
மகளை ஆஜர்படுத்த தந்தை ஆட்கொணர்வு மனு நீதிபதிகளுடன் வீடியோகாலில் சென்னை பெண் ஊழியர் பேச்சு: பாதுகாப்பு வழங்க போலீசுக்கு உத்தரவு
மதுரை ஆதீனத்தில் இருந்து தம்பிரான் திடீர் விலகல்: திருவாரூரில் பரபரப்பு
அதிமுக மாஜி எம்எல்ஏ வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு 8 கிலோ தங்கம், வெள்ளி, 4 சொகுசு கார் 214 சொத்து ஆவணங்கள் பறிமுதல்: கிரிப்டோகரன்சி, வெளிநாட்டு முதலீடுகளும் சிக்கியது
ராணுவவீரர் உடலுக்கு மரியாதை செய்துவிட்டு திரும்பிய அமைச்சரின் காரை வழிமறித்து செருப்பு வீசி பாஜவினர் தாக்குதல்: மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு
சிறுமி கருமுட்டை விற்பனை சேலம் மருத்துவமனைக்கு சீல்
வீட்டில் பிரார்த்தனை கூட்டத்திற்கு தடை விதித்தது சரிதான்: கலெக்டர் உத்தரவை எதிர்த்த மனு தள்ளுபடி
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!