டிமாண்டி காலனி 2ம் பாகத்தில் அருள்நிதி
2022-05-24@ 00:04:03

சென்னை: அருள்நிதி நடிப்பில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில், கடந்த 2015ம் ஆண்டு வெளியான படம் டிமாண்டி காலனி. இந்த படம் வெளியாகி ஏழு ஆண்டுகள் ஆனதை அடுத்து நேற்று படக்குழுவினர் இதனை கொண்டாடினார்.இந்நிலையில் இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது சமூக வலைத்தளத்தில் டிமாண்டி காலனி படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டு உள்ளதாக கூறியுள்ளார். ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்கப்போவதில்லை என்றும் அவருடைய உதவியாளர் வெங்கி வேணுகோபால் இயக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த படத்தின் கதையை எழுதுவதோடு இந்த படத்தை அஜய் ஞானமுத்து தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.டிமாண்டி காலனி முதல் பாகத்தில் அருள்நிதி இறந்துவிடுவார். அதனால் அருள்நிதியை வைத்து மீண்டும் எப்படி இரண்டாம் பாகம் உருவாகும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். ‘அது சஸ்பென்ஸ்’ எனக் கூறிய அஜய் ஞானமுத்து, முதல் பாகத்தில் நடித்த அருள்நிதி உள்பட முக்கிய கேரக்டர்களும், மேலும் சில புதிய கேரக்டரில் சிலரும் நடிக்க உள்ளனர் என தெரிவித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலையில் தொடங்குகிறது.
மேலும் செய்திகள்
எஸ்.எஸ்.எல்.வி.டி1 ராக்கெட் ஏவிய 2 செயற்கைக்கோள்களும் செயலிழப்பு இஸ்ரோ அறிவிப்பு
ரிசர்வ் வங்கி அங்கீகரித்த வங்கிகள், நிதி நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டும் பொதுமக்களுக்கு டிஜிபி அறிவுறுத்தல்
அனைத்து குடும்பங்களுக்கும் குடும்ப சுகாதர அட்டை
கலைஞரின் 4ம் ஆண்டு நினைவு நாள் டெல்லியில் அனைத்து கட்சியினர் மரியாதை
வரும் 13 முதல் 15ம் தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும்; எல்.முருகன் வேண்டுகோள்
மாநகர பஸ்களில் பொருத்த வெளிநாடுகளில் இருந்து சிசிடிவி கேமரா வாங்க திட்டம்; போக்குவரத்துறை உயரதிகாரி தகவல்
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!