நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி ஜவுளி உற்பத்தியாளர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்
2022-05-23@ 14:31:25

திருப்பூர்: நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி ஜவுளி உற்பத்தியாளர்கள் நடத்திவரும் வேலைநிறுத்தப் போராட்டம் 2-ம் நாளாக நீடிக்கும் நிலையில், சிறு,குறு விசைத்தறி உரிமையாளர்களும் ஆதரவு தெரிவித்து, போராட்டத்தில் குதித்துள்ளனர். நூல் விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர வலியுறுத்தி, திருப்பூர், கோவை மாவட்டங்களை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் நேற்றில் இருந்து வரும் 5-ம் தேதி வரை 15 நாட்களுக்கு முழு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் 2 லட்சம் விசைத்தறிகள் இயங்காத சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே, பஞ்சு மற்றும் நூல் ஏற்றுமதிக்கு தடை விதித்து நூல்விலையை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு ஜவுளி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நூல்விலையை கட்டுப்படுத்தக்கோரி நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் விசைத்தறி உரிமையாளர்கள் தொடங்கியுள்ள போராட்டம் 8-வது நாளாக நீடிக்கிறது. இதனால் இதுவரை ரூ.20 கோடி வரையிலான ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே விசைத்தறி உரிமையாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சிறு,குறு விசைத்தறி உரிமையாளர்களும் வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.
மேலும் செய்திகள்
கோவை நகைக்கடையில் ரூ.55 லட்சம் நகை மோசடி ‘ஆன்லைன் ரம்மி’யில் இழந்த சூபர்வைசரிடம் விசாரணை
குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பரிந்துரைப்படி பள்ளிகளில் தொடர்ந்து தவறு செய்யும் மாணவர்களுக்கு நூதன தண்டனை; பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்
கி.மு. 300 முதல் 10-ம் நூற்றாண்டு வரையிலான பல்வேறு காலகட்டங்களில் உருவானது கீழடி நகரம்; மத்திய தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தகவல்
கருமுட்டை விவகாரத்தில் ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு ‘சீல்’
பலகோடி மோசடி செய்த உரிமையாளர்கள் தலைமறைவு; ஐஎப்எஸ் நிதி நிறுவன ஏஜென்ட் தற்கொலை காட்பாடி அருகே சோகம்
1.30 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு காவிரி ஆற்றில் தொடரும் வெள்ளப்பெருக்கு
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!