தீபாவளி சீட்டு நடத்தி ரூ.28 லட்சம் மோசடி: பெண் கைது
2022-05-23@ 05:51:23

பெரம்பூர்:பிராட்வே பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் ராணி (42). இவர், கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகர் வள்ளுவர் தெருவை சேர்ந்த நந்தகுமார் (49), அவரது மனைவி சாந்தி (40), ஆகியோரிடம் 2019ம் ஆண்டு தீபாவளி சீட்டு கட்டியுள்ளார். மேலும், தனது நண்பர்களான ஜெயந்தி, மல்லிகா, முனியம்மாள், பொம்மி உள்ளிட்ட 140 பேர், ரூ.28 லட்சம் வரை நந்தகுமார் மற்றும் அவரது மனைவி சாந்தியிடம் சீட்டு கட்டி வந்துள்ளனர்.
ஆனால், சீட்டு முதிர்வு தொகையை திருப்பி கொடுக்காமல் தம்பதி ஏமாற்றி வந்துள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.a இதையடுத்து பண மோசடி செய்த தம்பதி மீது வழக்கு பதிய போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில், கொடுங்கையூர் போலீசார், மோசடி தம்பதி மீது வழக்கு பதிவு செய்தனர். இதில், நந்தகுமார் முன்ஜாமீன் பெற்று விட்டார். தலைமறைவாக இருந்த சாந்தியை நேற்று போலீசார் கைது செய்தனர்.
மேலும் செய்திகள்
இடைக்கழிநாடு பேரூராட்சியில் மழைநீர் வடிகால்வாயில் கழிவுகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ஊராட்சி தலைவர்களுக்கு பயிற்சி
மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கடப்பாரையால் அடித்து கொலை செய்த கணவன் போலீசில் சரண்
கும்மிடிப்பூண்டி அருகே மாதர்பாக்கம் ஊராட்சியில் டவர் அமைக்க எதிர்ப்பு; இடத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
6 வழிச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகளுடன் விவசாய சங்க மாநில தலைவர் கலந்துரையாடல்; நீதமன்றத்தில் வழக்கு தொடர முடிவு
அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் போதை பழக்கத்திற்கு எதிராக மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!