பெட்ரோல், டீசல் விலையை மாநில அரசு குறைக்கும் என நம்பிக்கை இருக்கிறது: அண்ணாமலை பேட்டி
2022-05-23@ 05:42:31

சென்னை,: பெட்ரோல், டீசல் விலையை மாநில அரசு குறைக்கும் என நம்பிக்கை இருக்கிறது என தமிழகபாஜ தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பெட்ரோல், டீசல் விலையை மீண்டும் ஒன்றிய அரசு குறைத்து இருக்கிறது. இதற்கு முன்பு நவம்பர் மாதத்தில் ஒன்றிய அரசு விலை குறைத்து இருக்கிறது. இந்த 6 மாத காலத்தில் ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் விலையை ரூ.14.50 ஆக குறைத்து
இருக்கிறது. அதேபோல் டீசல் விலையை ரூ.17 ஆக குறைத்து இருக்கிறார்கள். சர்வதேச சந்தையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டு இருக்கும் நிலையில், பிரதமர் மோடி சாதாரண மக்களுக்காக இதை செய்து கொண்டு இருக்கிறார். இரண்டாவது, 9 கோடி பயனாளிகளுக்கு இலவச எரிவாயு திட்டத்தின் கீழ் ரூ.200 சிலிண்டருக்கு மானியம், அறிவித்து இருக்கிறார்.
எனவே, மாநில அரசு தேர்தலில் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை குறைப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. குறைக்கவில்லை என்றால் பாஜ தொண்டர்கள் கோட்டையை முற்றுகையிட தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: ஜி.கே.வாசன் வேண்டுகோள்
பந்திக்கு முந்து என்ற பாணியில் யார் அழைத்தாலும் பாயுடன் படுப்பதுதான் ஓபிஎஸ் வேலை: ஜெயக்குமார் கடும் தாக்கு
சொல்லிட்டாங்க...
31 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு பீகாரில் நிதிஷ் அரசில் லாலு கட்சி ஆதிக்கம்: காங்கிரசுக்கு 2 பதவி
திமுக கொள்கைக்கும், பாஜ கொள்கைக்கும் எந்த உறவும் கிடையாது திமுகவின் கொள்கைகளை எந்த காலத்திலும் சூழ்நிலையிலும் விட்டு கொடுக்க மாட்டேன்: திருமாவளவன் மணிவிழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
தமிழ்நாட்டின் தலைவர் மட்டுமல்ல தேசிய தலைவராக உயர்வதற்கு மு.க.ஸ்டாலினுக்கு பெரிய வாய்ப்பு: திருமாவளவன் பேச்சு
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!