ஆழியார் அணையில் ஒன்றிய ரிசர்வ் படை கல்லூரி வீரர்களுக்கு பேரிடர் மீட்பு பயிற்சி
2022-05-22@ 11:06:54

ஆனைமலை: கோவை அருகே உள்ள தொப்பம்பட்டி ஒன்றிய ரிசர்வ் படை பயிற்சி கல்லூரியில் உள்ள வீரர்களுக்கு ஆழியார் அணையில் பேரிடர் மீட்பு பயிற்சி மேற்கொள்வது வழக்கம். இந்நிலையில், தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதால், நேற்று ஒன்றிய ரிசர்வ் படை பயிற்சி கல்லூரியின் ஐஜி வர்மா உத்தரவின் பேரில், கமாண்டோ ராஜேஷ்குமார், துணை கமாண்டோ ஹரிகுமார், ஆகியோர் தலைமையில், 80 மீட்பு படை வீரர்களுக்கு ஆழியார் அணையில் பயிற்சி மற்றும் ஒத்திகை நிகழ்ச்சி நடை பெற்றது.
பயிற்சியின்போது, பேரிடர் காலத்தில் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், சம்பவ இடத்தில் கிடைக்கும் பொருட்களை கொண்டு எவ்வாறு மீட்பு பணிகளை மேற்கொள்வது என்பது குறித்தும், நீரில் மூழ்கியவர்களை பாதுகாப்பாக மீட்பது குறித்தும், பயிற்சி மற்றும் வீரர்களுக்கு ஒத்திகை நிகழ்ச்சி செய்து காண்பிக்கப்பட்டது. இந்த பயிற்சி முகாமில் மீட்புப் படை ஆய்வாளர் சுனில் மற்றும் பிரபு ஆகியோர் தலைமையில் 8 பேர் கொண்ட அதிகாரி பயிற்சி அளித்தனர்.
மேலும் செய்திகள்
12 அடி அகலம், 32 அடி நீள தேசிய கொடி உருவாக்கி மழலையர் பள்ளி குழந்தைகள் சாதனை
விடுதியில் பிளஸ் 2 மாணவன் தற்கொலை சிபிசிஐடி விசாரணைக்கு வழக்கு மாற்றம்: ஊத்தங்கரையில் போலீஸ் குவிப்பு
திருத்தணி அருகே வீடுகள் இடிப்பை கண்டித்து பொது மக்கள் மறியல்: வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ சமரசம்
உத்திரமேரூரில் ரூ.21 லட்சம் மதிப்பில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம்; சுந்தர் எம்எல்ஏ திறந்து வைத்தார்
அடிப்படை வசதிகளை செய்து தர கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து மக்கள் மறியல்; கும்மிடிப்பூண்டி அருகே பரபரப்பு
இலவச கால்நடை மருத்துவமுகாம்
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!