சென்னையில் வரும் 28ம் தேதி சிறப்பு பொதுக்குழு பாமக தலைவராக அன்புமணி தேர்வாகிறார்? ஜி.கே.மணிக்கு வேறு பதவி வழங்க திட்டம்
2022-05-22@ 02:04:31

சென்னை: சென்னையில் வருகிற 28ம் தேதி பாமக சிறப்பு பொதுக்குழு கூடுகிறது. இதில் பாமக தலைவராக அன்புமணி நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் ஜி.கே.மணிக்கு வேறு பதவி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் வருகிற 28ம் தேதி (சனிக்கிழமை) காலை 11 மணியளவில் சென்னை அடுத்த திருவேற்காட்டில் நடக்கிறது. கூட்டத்திற்கு பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமை வகிக்கிறார். பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி முன்னிலை வகிக்கின்றனர். பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா கூட்டத்தில் பங்கேற்கின்றனர். பாமக கட்சி் தலைவராக ஜி.கே.மணி கடந்த 25 ஆண்டுகளாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் கட்சியை மேலும் வலுப்படுத்தும் வகையில் கட்சித் தலைவராக அன்புமணியை கொண்டுவர பாமகவினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பு சிறப்பு பொதுக்குழுவில் அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
அன்புமணிக்கு தலைவர் பதவி வழங்கும் பட்சத்தில், ஜி.கே.மணிக்கு வேறு முக்கியப் பொறுப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. அதாவது, ஆலோசகர் பதவி வழங்கப்படலாம் என்றும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. 2024ல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்வைத்தே அன்புமணிக்கு மாநில தலைவர் பதவி வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் அன்புமணிக்கு தலைவர் பதவி வழங்கப்படவே இந்த சிறப்பு பொதுக்குழு கூடுவதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வருகிற 24ம் தேதி ஜி.கே.மணி தலைவராக பதவி ஏற்று 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி சென்னையில் பாராட்டு விழாவும் நடத்தப்படுகிறது.
* எனக்கு பதவி ஆசை கிடையாது - அன்புமணி
பாமக செங்கல்பட்டு மத்திய மற்றும் தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் செங்கல்பட்டு திம்மாவரத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கலந்து கொண்டார். அன்புமணி பேசுகையில், ‘‘நாம் கட்சி தொடங்கி 32 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இதுவரை ஆட்சிக்கு வரவில்லை. எனக்கு பதவி ஆசையெல்லாம் கிடையாது. ஆனால் ஒருமுறை ஆட்சிக்கு வந்தால் போதும். இந்த பொதுக்குழு கூட்டம் கூட்டியது நான் முதல்வராக வரவேண்டும் என்று இல்லை. பாமக ஆட்சிக்கு வரவேண்டும் என்பதால்தான்’’ என்றார். பாமக தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, மாநில வன்னியர் சங்க செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Tags:
Chennai on the 28th Anbumani will be elected as the Chairman of the Special General Committee Pamaka? GK Mani plan to offer the post சென்னை வரும் 28ம் தேதி சிறப்பு பொதுக்குழு பாமக தலைவராக அன்புமணி தேர்வாகிறார்? ஜி.கே.மணி பதவி வழங்க திட்டம்மேலும் செய்திகள்
அதிமுகவுக்கு நல்ல நீதி கிடைத்துள்ளது தனி நபருக்கு கட்சியை கொண்டு செல்ல நினைத்தால் அது நடக்காது: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
சொல்லிட்டாங்க...
இமாச்சலத்தில் 2 காங். எம்எல்ஏ பாஜ.வுக்கு தாவல்
ஜம்மு காஷ்மீர் காங். பிரசார குழு தலைவர் சோனியா வழங்கிய பதவியை நிராகரித்தார் குலாம் நபி ஆசாத்: அவமானப்படுத்துவதாக குற்றச்சாட்டு
தேதி நெருங்குவதால் பரபரப்பு காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியா?...
89வது பிறந்த நாளை முன்னிட்டு முரசொலி மாறன் சிலைக்கு துரைமுருகன் அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை: தமிழகம் முழுவதும் நிர்வாகிகள் மலரஞ்சலி
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...
பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் லாரியும், பயணிகள் பேருந்தும் மோதி தீ விபத்து.. 20 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!!
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!