தமிழகத்தில் கள்ளச்சாராயம் போலி மதுவை ஒழிக்க நடவடிக்கை: எடப்பாடி கோரிக்கை
2022-05-21@ 01:10:03

சென்னை: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை மெரினா கடற்கரை சாலையில், காவல் துறை தலைவராக டிஜிபி அலுவலகம் எதிரில் உள்ள கடற்கரை மணலில் எண்ணிலடங்கா கள்ளச்சாராய ஊரல்கள், போலி மது பாட்டில்கள் புதைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக வரும் செய்திகள் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. காவல் துறைக்கு தெரியாமல் இவ்வளவும் புதைத்து வைக்க முடியாது.
இது தொடர்பாக ஒன்றிரண்டு பெண்களை கைது செய்து, கணக்கு காட்டி பிரச்னையின் தீவிரத்தை மூடி மறைக்க காவல் துறை முயல்கிறதோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது. இந்த நிலை இப்படியே தொடர்ந்தால் கள்ளச்சாராய மரணங்கள் ஏற்படும் என்று தாய்மார்கள் அஞ்சுகிறார்கள். தமிழகத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுவை முற்றிலுமாக ஒழிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் தாமதம் ஏற்பட்டால், அப்பாவி மக்களின் கள்ளச்சாராய மரணங்களை தடுக்க தமிழக தாய்மார்களுடன் இணைந்து வீதியில் இறங்கி அதிமுக போராடும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை மாலை செஸ் ஒலிம்பியாட் போட்டி பிரமாண்ட நிறைவு விழா
சென்னை ஆலந்தூரில் பேருந்து மோதி பெயர் பலகை விழுந்து விபத்து.: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் மற்றும் ரூ.3 லட்சம் நிதியுதவி
முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி சென்னை மாநகரில் குடிநீர் பணி திறம்பட செயல்படுத்தப்படுகிறது: அமைச்சர் கே.என்.நேரு தகவல்
தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் சேர பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடக்கம்
தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.: வானிலை மையம் தகவல்
சிறந்த கைத்தறி நெசவாளர்களுக்கு விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்..!!
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!