சத்தி அருகே அரசு பேருந்து சென்டர் மீடியனில் மோதி விபத்து : அதிர்ஷ்டவசமாக பயணிகள் தப்பினர்
2022-05-20@ 18:17:21

சத்தியமங்கலம்: கும்பகோணத்தில் இருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து நேற்று இரவு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. சத்தியமங்கலம்- கோபிசெட்டிப்பாளையம் சாலையில் அரியப்பம்பாளையம் அருகே சாலையின் நடுவே உள்ள சென்டர் மீடியன் மீது எதிர்பாராத விதமாக அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த பயணிகள் காயமின்றி உயிர்தப்பினர்.
நடத்துநருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. அவர் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே இடத்தில் தடுப்பு சுவர் மீது முட்டை பாரம் ஏற்றி சென்ற லாரி மோதி விபத்துக்குள்ளானது. எனவே அப்பகுதியில் ஒளிரும் ஸ்டிக்கர் மற்றும் தெருவிளக்கு அமைத்து விபத்து ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
அதிமுக ஆட்சியில் முறைகேடு செய்தவர்கள் சிக்க வாய்ப்பு போலி பத்திரப்பதிவுகள் குறித்து புகார் அளிக்கலாம்: சிவகாசி சார்பதிவாளர் அதிரடி
நாமக்கல் அருகே அலுவலகத்தில் விஏஓ மர்மச்சாவு
டிஎஸ்பி ஆபீஸ் வாசலில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ஏட்டு
ஆரணி நகராட்சியில் ஒப்பந்ததாரரின் அவலம் போர்வெல்லை மூழ்கடித்து சிமென்ட் சாலை அமைப்பு
வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.10,000 அபராதம்: ஐகோர்ட் உத்தரவு
மாணவர்களின் பாதுகாப்புக்கு பள்ளி நிர்வாகமே பொறுப்பு: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...
பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் லாரியும், பயணிகள் பேருந்தும் மோதி தீ விபத்து.. 20 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!!
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!