மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை
2022-05-20@ 18:15:41

அம்பை: மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் தொடரும் மழை காரணமாக மணிமுத்தாறு அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த ஒருவாரமாக நன்றாக மழை பெய்து வருகிறது. அம்பாசமுத்திரம் வனக்கோட்ட மணிமுத்தாறு, மாஞ்சோலை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த இரு தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையினால் மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவும் அதிகரித்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 229 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது, வனப்பகுதியில் 3.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அருவி பகுதியை பார்வையிட மட்டும் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவர் என்றும், அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் வனத்துறை தெரிவித்துள்ளது. நீர்வரத்து குறைந்ததும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என அம்பாசமுத்திரம் வன உயிரின காப்பாளரும் புலிகள் காப்பக துணை இயக்குனருமான செண்பக பிரியா தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
மகளை ஆஜர்படுத்த தந்தை ஆட்கொணர்வு மனு நீதிபதிகளுடன் வீடியோகாலில் சென்னை பெண் ஊழியர் பேச்சு: பாதுகாப்பு வழங்க போலீசுக்கு உத்தரவு
மதுரை ஆதீனத்தில் இருந்து தம்பிரான் திடீர் விலகல்: திருவாரூரில் பரபரப்பு
அதிமுக மாஜி எம்எல்ஏ வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு 8 கிலோ தங்கம், வெள்ளி, 4 சொகுசு கார் 214 சொத்து ஆவணங்கள் பறிமுதல்: கிரிப்டோகரன்சி, வெளிநாட்டு முதலீடுகளும் சிக்கியது
ராணுவவீரர் உடலுக்கு மரியாதை செய்துவிட்டு திரும்பிய அமைச்சரின் காரை வழிமறித்து செருப்பு வீசி பாஜவினர் தாக்குதல்: மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு
சிறுமி கருமுட்டை விற்பனை சேலம் மருத்துவமனைக்கு சீல்
வீட்டில் பிரார்த்தனை கூட்டத்திற்கு தடை விதித்தது சரிதான்: கலெக்டர் உத்தரவை எதிர்த்த மனு தள்ளுபடி
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!