சென்னை கொடுங்கையூர் குப்பை மேட்டில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து: தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள்
2022-05-20@ 17:07:10

சென்னை: சென்னை கொடுங்கையூர் குப்பை மேட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காட்சியளிக்கிறது. சென்னை கொடுங்கையூர் குப்பை மேட்டில் வட சென்னை மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து லாரிகள் மூலம் குப்பைகளை கொட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்படுகிறது. மேலும் கொடுங்கையூர், கொருக்குப்பேட்டை, எழில்நகர், தண்டையார்பேட்டை முழுவதும் புகைமூட்டமாக காணப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே தீயணைப்பு படைவீரர்கள் அப்பகுதிக்கு விரைந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சமூக ஆர்வலர்கள் பலர் கூறுகையில் குப்பைக்கிடங்கில் அவ்வப்போது தீப்பற்றி எரிவதாகவும், குப்பைகள் அதிகரிப்பால் ஊழியர்கள் குப்பைகளை தீ வைத்து கொளுத்திவிடுகின்றனர்களா அல்லது சமூக விரோதிகள் யாரேனும் தீ வைத்து கொளுத்திவிடுகின்றனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் இதனை மாநகராட்சி அதிகாரிகள் கருத்தில் கொண்டு இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடப்பதை தவிர்க்க வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
மின்சார கேபிள் அமைக்கும் பணிக்காக கிண்டி ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து மாற்றம்
தாட்கோ பொருளாதார மேம்பாட்டு திட்டங்களில் பயன்பெற குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.3 லட்சமாக உயர்வு: விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு
பூக்கடை பகுதியில் 2 ஆண்டாக வாடகை தராத 130 கடைகளுக்கு சீல்: மாநகராட்சி அதிரடி நடவடிக்கை
உயர் நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உற்சாக கொண்டாட்டம்: இபிஎஸ் அணியினர் சோகத்தில் மூழ்கினர்
புதுக்கோட்டையில் இந்த ஆண்டு 50 இடங்களுடன் பல் மருத்துவ கல்லூரி தொடங்க நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
வார்டு கமிட்டி, ஏரியா சபைகள் குறித்து மாமன்ற உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வூட்ட வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...
பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் லாரியும், பயணிகள் பேருந்தும் மோதி தீ விபத்து.. 20 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!!
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!