கொள்ளிடம் அருகே விவசாயிகளுக்கு காய்கறி பயிரில் பண்ணை பள்ளி பயிற்சி
2022-05-20@ 12:55:13

கொள்ளிடம் : மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே திருமயிலாடி கிராமத்தில் வேளாண்மை துறை அட்மா திட்டத்தின் கீழ் காய்கறி சாகுபடியில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை பண்ணைப் பள்ளி பயிற்சி நேற்று நடைபெற்றது. கொள்ளிடம் வேளாண் உதவி இயக்குனர் எழில்ராஜா தலைமை வகித்தார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் அரவிந்தன் வரவேற்றார்.மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சேகர் கலந்து கொண்டு தொழில்நுட்பம் மற்றும் திட்ட விளக்க உரையாற்றினார். கொள்ளிடம் தோட்டக்கலை அலுவலர் சுகன்யா,காய்கறி சாகுபடி முக்கியத்துவம் என்ற தலைப்பில் பேசினார்.
பண்ணை பள்ளியின் தொழில்நுட்ப பயிற்றுனர் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் தோட்டக்கலை துறை இணைப் பேராசிரியர் பத்மநாபன்,உதவி வேளாண்மை அலுவலர்கள், உதவி தோட்டக்கலை அலுவலர் பாஸ்கர், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு காய்கறி சாகுபடி மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி அளித்தனர். பயிற்சியில் கொள்ளிடம் வட்டார அளவில் தேர்வு செய்யப்பட்ட 25க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். முடிவில் ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ் நன்றி கூறினார்.
மேலும் செய்திகள்
இடைக்கழிநாடு பேரூராட்சியில் மழைநீர் வடிகால்வாயில் கழிவுகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ஊராட்சி தலைவர்களுக்கு பயிற்சி
மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கடப்பாரையால் அடித்து கொலை செய்த கணவன் போலீசில் சரண்
கும்மிடிப்பூண்டி அருகே மாதர்பாக்கம் ஊராட்சியில் டவர் அமைக்க எதிர்ப்பு; இடத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
6 வழிச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகளுடன் விவசாய சங்க மாநில தலைவர் கலந்துரையாடல்; நீதமன்றத்தில் வழக்கு தொடர முடிவு
அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் போதை பழக்கத்திற்கு எதிராக மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!