மாமல்லபுரத்தில் நடக்கவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான அடிப்படை வசதிகள்: பேரூராட்சிகளின் இணை இயக்குனர் ஆய்வு
2022-05-20@ 01:43:10

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் நடக்கவுள்ள, உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான அடிப்படை வசதிகள் குறித்து பேரூராட்சிகளின் இணை இயக்குனர் மலைமான்திருமுடி காரி ஆய்வு செய்தார். மாமல்லபுரத்தில் வரும் ஜூன் 27 முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை 44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடக்கவுள்ளது. இதையாட்டி, முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரடி பார்வையில் குழு அமைத்து, தனி அலுவலர்களை நியமித்து, பல்வேறு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், போட்டி நடக்கும் இடத்தில் தினமும் அமைச்சர்கள், தனி அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கின்றனர்.
போட்டியில் பங்கேற்க வரும் வீரர்கள், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மாமல்லபுரத்தில் உள்ள சின்னங்களான வெண்ணெய் உருண்டை பாறை, அர்ச்சுணன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோயில் உள்பட புராதன சின்னங்களை சுற்றி பார்க்க உள்ளனர். அதுபோல் வருபவர்களுக்கு, அடிப்படை தேவையான குடிநீர், கழிப்பறை, சாலை உள்பட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தருவது குறித்து பேரூராட்சிகளின் இணை இயக்குனர் மலைமான்திருமுடி காரி, ஆரோவில் பகுதியில் உள்ள குளியலறை, கழிப்பறை சீரமைப்பு, மின் கம்பங்கள், வாகன நிறுத்துமிடம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், அனைத்து பணிகளும் போட்டி தொடங்குவதற்கு முன்பே செய்து முடிக்க வேண்டும். தினமும், சுழற்சி முறையில் மாமல்லபுரத்தில் அனைத்து தெருக்களிலும் குப்பைகள் சேராமல் தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அப்போது, பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ், துப்புரவு ஆய்வாளர் ரகுபதி, பொறியாளர் சிவக்குமார், துப்புரவு மேற்பார்வையாளர் தாமோதரன் ஆகியோர் இருந்தனர். செஸ் ஒலிம்பியாட் போட்டியை காண வெளிநாடுகளில் இருந்து வருபவர் நேரடியாக கண்டுகளிக்க முடியாது. டிவி சேனல்கள் மூலமாக பார்க்க முடியும். மாமல்லபுரத்தில் பழைய செல்போன் டவர்களில், வேகம் சற்று குறைவாக உள்ளது. இதனால் செல்போனில் ஆன்லைன் மூலம் நேரடியாக போட்டியை பார்க்கும் வகையில் தற்காலிகமாக, 10க்கும் மேற்பட்ட செல்போன் டவர்கள் அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், முதல்கட்டமாக மாமல்லபுரம் அடுத்த தேவனேரியில் இசிஆர் சாலையொட்டி தனியார் கம்பெனி மூலம் தற்காலிகமாக செல்போன் டவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த செல்போன் டவரால் வெளிநாட்டினர் மட்டுமின்றி, உள்ளூர் மக்களும் போட்டியை நேரடியாக தங்களது செல்போனில் கணா முடியும் கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்
காஞ்சிபுரம் மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு மேசை, விலையில்லா சைக்கிள்கள்; எம்எல்ஏ எழிலரசன் வழங்கினார்
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரியில் சுதந்திர போராட்ட தியாகி கொடியேற்றினார்
கோளம்பாக்கம் அடுத்த படூரில் ரூ.3 கோடி மதிப்புள்ள நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றம்; அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
போலி பல்கலை மூலம் ரூ.15 ஆயிரத்திற்கு டாக்டர் பட்டம் விற்பனை
இன்றைய இளைஞர்கள் நாட்டுப்புற கலைகளை கற்று மேல்நாடுகளுக்கு சென்று கலையினை வளர்க்க வேண்டும்; மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர் அர்ச்சுனன் வலியுறுத்தல்
போலி கன்டெய்னர் கம்பெனிகள் தொடங்கி ரூ.50 கோடி மோசடி, வெளிநாடு தப்ப முயன்ற முக்கிய குற்றவாளி கைது; மும்பை விமான நிலையத்தில் தனிப்படை அதிரடி
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!