மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் கார் கவிழ்ந்து சுற்றுலா பயணி பலி: சிறுமி உள்பட 4 பேர் படுகாயம்
2022-05-19@ 18:47:17

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில் பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் சுற்றுலா பயணி சம்பவ இடத்தில் பலியானார். சிறுமி உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர். கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் புல்பள்ளி கனிகுளத்து ஹவுஸ் பகுதியை சேர்ந்தவர் ஜோஸ்(65). இவரும், இவரது மகன் யோபேஷ் (35),யோபேஷ் மகள் அனாமிகா(எ)அம்மு(9), ஆப்ரஹாம் மகன் தாமஸ்(68), செபாஸ்டியன் மகன் ஜார்ஜ் (60) ஆகியோர் கடந்த 16ம் தேதி வயநாட்டிலிருந்து வேளாங்கண்ணி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றனர். நேற்று சாமி தரிசனம் முடித்துவிட்டு ஊர் திரும்பினர். காரை யோபேஸ் ஓட்டி வந்தார்.
இந்நிலையில் இன்று காலை சுமார் 5.30 மணி அளவில் மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 3 வது கொண்டை ஊசி வளைவு அருகே கார் சென்று கொண்டு இருக்கும் போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சுமார் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் காரில் பயணம் செய்த ஜோஸ் (65) சம்பவ இடத்தில் உயிர் இழந்தார். மேலும் காரில் பயணம் செய்த யோபேஷ், அனாமிகா, தாமஸ் மற்றும் ஜார்ஜ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற மேட்டுப்பாளையம் போலீசார் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த 4 பேரையும் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
மகளை ஆஜர்படுத்த தந்தை ஆட்கொணர்வு மனு நீதிபதிகளுடன் வீடியோகாலில் சென்னை பெண் ஊழியர் பேச்சு: பாதுகாப்பு வழங்க போலீசுக்கு உத்தரவு
மதுரை ஆதீனத்தில் இருந்து தம்பிரான் திடீர் விலகல்: திருவாரூரில் பரபரப்பு
அதிமுக மாஜி எம்எல்ஏ வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு 8 கிலோ தங்கம், வெள்ளி, 4 சொகுசு கார் 214 சொத்து ஆவணங்கள் பறிமுதல்: கிரிப்டோகரன்சி, வெளிநாட்டு முதலீடுகளும் சிக்கியது
ராணுவவீரர் உடலுக்கு மரியாதை செய்துவிட்டு திரும்பிய அமைச்சரின் காரை வழிமறித்து செருப்பு வீசி பாஜவினர் தாக்குதல்: மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு
சிறுமி கருமுட்டை விற்பனை சேலம் மருத்துவமனைக்கு சீல்
வீட்டில் பிரார்த்தனை கூட்டத்திற்கு தடை விதித்தது சரிதான்: கலெக்டர் உத்தரவை எதிர்த்த மனு தள்ளுபடி
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!