ஆச்சாள்புரம் தியாகராஜ சுவாமி கோயிலில் திருஞானசம்பந்தர் திருக்கல்யாண உற்சவம்
2022-05-19@ 18:42:20

கொள்ளிடம்: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அடுத்த ஆச்சாள்புரத்தில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான சிவலோக தியாகராஜ சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயில் தனி சன்னதியில் தோத்திர பூர்ணாபிகையுடன் திருஞானசம்பந்தர் திருமண கோலத்தில் அருள்பாலித்து வருகிறார். இந்த கோயிலில் திருஞானசம்பந்தர் திருக்கல்யாணத்தில் பங்கேற்ற அனைவரும் சிவஜோதி தரிசனத்தில் ஐக்கியமாகிய ஐதீக வரலாற்று நிகழ்வு ஆண்டுதோறும் வைகாசி வாதம் மூல நட்சத்திரத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில் சிவலோக தியாகராஜ சுவாமி கோயிலில் திருஞானசம்பந்தர் திருக்கல்யாணம், சிவஜோதி தரிசனம் நேற்றிரவு நடந்தது. இரவு 9.30 மணியளவில் திருஞானசம்பந்தருக்கு உபநயனம், திருமுறைகள் திருவீதி வலம் வருதல், மாப்பிள்ளை அழைப்பு, மாலை மாற்றும் நிகழ்வு, ஊஞ்சல் உற்சவம் நடந்தது. பின்னர் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இன்று அதிகாலை 4 மணிக்கு சிவஜோதி தரிசனம் நடந்தது.
மேலும் செய்திகள்
நாமக்கல் அருகே அலுவலகத்தில் விஏஓ மர்மச்சாவு
டிஎஸ்பி ஆபீஸ் வாசலில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ஏட்டு
ஆரணி நகராட்சியில் ஒப்பந்ததாரரின் அவலம் போர்வெல்லை மூழ்கடித்து சிமென்ட் சாலை அமைப்பு
வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.10,000 அபராதம்: ஐகோர்ட் உத்தரவு
மாணவர்களின் பாதுகாப்புக்கு பள்ளி நிர்வாகமே பொறுப்பு: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
புதுச்சேரி பட்ஜெட் 22ம் தேதி தாக்கல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...
பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் லாரியும், பயணிகள் பேருந்தும் மோதி தீ விபத்து.. 20 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!!
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!