மதுரை-செகந்திராபாத் கோடை கால சிறப்பு ரயில் இயக்கம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு
2022-05-19@ 18:38:23

மதுரை: மதுரையிலிருந்து தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்துக்கும், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து மதுரைக்கும் கோடை கால சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு மத்திய ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. ஐதராபாத் - மதுரை சிறப்பு ரயில் (07253) ஐதராபாத்தில் இருந்து இன்று பகல் 3.50 மணிக்கு புறப்பட்டு, நாளை மதியம் 2.40 மணிக்கு மதுரை வந்தடையும். அதேபோல செகந்திராபாத்திலிருந்து நாளை மாலை 5.40 மணியளவில் புறப்படும் ஹைதராபாத்-மதுரை சிறப்பு ரயில்(07254) நாளை மறுதினம் மாலை 4 மணிக்கு மதுரை வந்தடையும்.
இந்த ரயில்கள் திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், திருவண்ணாமலை, காட்பாடி, ரேணிகுண்டா, கூடூர், நெல்லூர், ஓங்கோல், தெனாலி, குண்டூர், சட்டெனப்பள்ளி, மிரியால்குடா, நலகொண்டா ஆகிய ரயில்நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதிப்பெட்டி, 5 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதிப்பெட்டி, 10 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிப்பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 2 பொதுப்பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டி இணைக்கப்படும்.
மேலும் செய்திகள்
இடைக்கழிநாடு பேரூராட்சியில் மழைநீர் வடிகால்வாயில் கழிவுகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ஊராட்சி தலைவர்களுக்கு பயிற்சி
மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கடப்பாரையால் அடித்து கொலை செய்த கணவன் போலீசில் சரண்
கும்மிடிப்பூண்டி அருகே மாதர்பாக்கம் ஊராட்சியில் டவர் அமைக்க எதிர்ப்பு; இடத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
6 வழிச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகளுடன் விவசாய சங்க மாநில தலைவர் கலந்துரையாடல்; நீதமன்றத்தில் வழக்கு தொடர முடிவு
அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் போதை பழக்கத்திற்கு எதிராக மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!