அமெரிக்காவில் இந்திய வம்சாவழி மாணவர் மீது கடும் தாக்குதல்!: இணையத்தில் வெளியான காணொலியால் டெக்சாஸில் பரபரப்பு..!!
2022-05-18@ 10:22:19

டெக்சாஸ்: அமெரிக்காவில் இந்திய அமெரிக்க மாணவர் கொடுமைப்படுத்தும் காணொலி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. டெக்சாஸில் உள்ள (COPPELL MIDDLE SCHOOL) உணவு கூடத்தில் அமர்ந்திருந்த 14 வயது இந்திய மாணவர் ஒருவரை அமெரிக்க மாணவர் எழுந்திரிக்க சொல்லி மிரட்டுவதும், பின்னர் மாணவர் கழுத்தை தனது கைகளால் நெரித்து இழுத்து தரையில் தள்ளும் காட்சியும் இடம் பெற்றுள்ளது. நிகழ்வின் போது உடன் இருந்த மாணவர் ஒருவர் இதனை பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய பள்ளி நிர்வாகம், பாதிக்கப்பட்ட இந்திய வம்சாவழி மாணவரை 3 நாட்கள் சஸ்பெண்ட் செய்திருப்பதற்கு கண்டனம் வலுத்து வருகிறது. இதையடுத்து பள்ளியின் பாரபட்ச நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தை நாட பாதிக்கப்பட்ட இந்திய மாணவரின் பெற்றோர் திட்டமிட்டுள்ளனர். அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவழி மாணவர் கொடுமைப்படுத்தப்படும் காணொலி டெக்சாஸில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் செய்திகள்
அரசியல் எனக்கு ஒத்துவராது அக்ஷய் குமார் கருத்து
2 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச விமான சேவை மீண்டும் துவங்கும் சீனா: இந்தியாவுக்கு அனுமதியில்லை
ரஷ்யாவின் எதிர்ப்பை மீறி பின்லாந்து, ஸ்வீடனுக்கு நேட்டோவில் அனுமதி: 30 நாடுகள் ஒப்புதல் கையெழுத்து
இலங்கை நாடாளுமன்றத்தில் இருந்து அதிபர் கோத்தபய விரட்டியடிப்பு: எதிர்க்கட்சிகளின் கோஷத்தால் ஓட்டம்
இலங்கை நாடாளுமன்றத்தில் ‘கோ ஹோம் கோத்த’ கோஷத்தால் அதிபர் ஓட்டம்: எதிர்கட்சிகளின் அமளியால் பரபரப்பு
2 நாளில் 24 நிலநடுக்கங்கள்: இன்றும் அந்தமானில் உணரப்பட்டது
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!