கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரிப்பால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு
2022-05-18@ 10:16:11

தருமபுரி: கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக ஒகேனக்கலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக நீரானது வந்துகொண்டிருக்கிறது. அதிக நீர்வரத்தின் காரணமாக ஒகேனக்கலில் பரிசில்களை இயக்கவும், நீர்நிலைகளில் குளிக்கவும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நேற்று 100 மி.மீ-க்கு அதிகமாக மழை பெய்ததை அடுத்து, ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரித்தது.
நேற்றைய நிலவரப்படி, ஒகேனக்கலில் நீர்வரத்து 6 ஆயிரம் கனஅடியாக அதிகரித்த நிலையில், இன்று காலை தமிழ்நாடு-கர்நாடக எல்லையான பிலிகுண்டு வழியாக வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக தண்ணீரானது வந்த வண்ணம் உள்ளது. அதிகபடியான நீர்வரத்தின் காரணமாக, ஒகேனக்கலில் உள்ள ஐந்தருவி, மெயின் அருவி உள்ளிட்ட பகுதிகளில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால், அங்கு குளிக்கவும், பரிசில் பயணம் செய்யவும் தடை விதித்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
மேலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதால், தொடர்ந்து காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்தானது அதிகரித்துள்ளது. இதனால் குடிநீர் தேவைக்காக அணையிலிருந்து வினாடிக்கு 1,500 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. கடந்த 15-ம் தேதி காலை 108.14 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை 109.04 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த 3 நாட்களில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 1.31 அடியாக அதிகரித்துள்ளது. மழையின் அளவை பொறுத்து நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகள்
2020ல் விடுதி சமையலர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டோர் பட்டியலை வெளியிட ஐகோர்ட் கிளை உத்தரவு
ஊராட்சி பொது நிதியில் இருந்து மக்கள் நலப்பணியாளர்களுக்கு கூடுதலாக ரூ.2,500 ஊதியம்: ஊரக வளர்ச்சி இயக்குநரகம் உத்தரவு
வேறொரு பெண்ணுடன் தொடர்பு என மனைவி புகார் போலீஸ் விசாரணையின்போது விஷம் குடித்து கணவன் தற்கொலை: அரக்கோணத்தில் அதிர்ச்சி சம்பவம்
தற்காலிக ஆசிரியர்கள் நியமன தடையை நீக்க கோரி முறையீடு: 8ம் தேதி விசாரணை
இலங்கை தமிழர்கள் 8 பேர் தனுஷ்கோடி வருகை
நெல்லையில் முதல் குறைதீர் கூட்டம் ஊர்காவல் படையில் திருநங்கைகளுக்கு வேலை: கலெக்டர் தகவல்
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!