சீனாவில் 123 பேர் உயிரிழக்க காரணமான விமான விபத்து :விமானத்தில் இருந்த ஒருவர் வேண்டுமென்றே விமானத்தை செயல் இழக்க செய்தது அம்பலம்!!
2022-05-18@ 10:00:12

பெய்ஜிங் : சீனாவில் 123 பேர் உயிரிழக்க காரணமான விமான விபத்து வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்டு இருக்கும் அதிர்ச்சி தகவல் புலனாய்வில் தெரியவந்துள்ளது. சீனாவின் விமான நிறுவனங்களில் ஒன்றான 'சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்' நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் கடந்த மார்ச் 21-ந்தேதி அந்நாட்டின் குன்மிங் நகரில் இருந்து குவாங்சு நோக்கி புறப்பட்டது. விமானம் அந்நாட்டின் ஷூவாங் மாகாணம் டென்ஜியான் கவுண்டிக்கு உட்பட்ட வுசோ என்ற நகரின் அருகே உள்ள மலைப்பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 123 பயணிகள், 9 பணியாளர்கள் என மொத்தம் 132 பேர் உயிரிழந்தனர்.
விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து கறுப்புப் பெட்டிகள் மீட்கப்பட்ட போதும், அதில் இருந்து விவரங்களை பெற முடியாத அளவிற்கு அவை சேதம் அடைந்து இருந்தன. இதையடுத்து கறுப்புப் பெட்டி அமெரிக்காவில் உள்ள விமானத்துறை நிபுணர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த விமான விபத்திற்கு 100% மனித தவறே காரணம் என்று நியூயார்க்கில் இருந்து வெளியாகும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நாளிதழ் தெரிவித்துள்ளது. விமானத்தை இயக்க விமானிகள் அறையான காக்பிட் பகுதியில் இருந்தவர்களில் ஒருவர் வேண்டுமென்றே விமானத்தை கட்டுப்பாடு இழக்க செய்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான சீன விமானத்தின் கறுப்புப் பெட்டியில் பதிவாகி இருந்த தரவுகளில் இருந்து இந்த அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்துள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் கூறியுள்ளது.
மேலும் செய்திகள்
அரசியல் எனக்கு ஒத்துவராது அக்ஷய் குமார் கருத்து
2 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச விமான சேவை மீண்டும் துவங்கும் சீனா: இந்தியாவுக்கு அனுமதியில்லை
ரஷ்யாவின் எதிர்ப்பை மீறி பின்லாந்து, ஸ்வீடனுக்கு நேட்டோவில் அனுமதி: 30 நாடுகள் ஒப்புதல் கையெழுத்து
இலங்கை நாடாளுமன்றத்தில் இருந்து அதிபர் கோத்தபய விரட்டியடிப்பு: எதிர்க்கட்சிகளின் கோஷத்தால் ஓட்டம்
இலங்கை நாடாளுமன்றத்தில் ‘கோ ஹோம் கோத்த’ கோஷத்தால் அதிபர் ஓட்டம்: எதிர்கட்சிகளின் அமளியால் பரபரப்பு
2 நாளில் 24 நிலநடுக்கங்கள்: இன்றும் அந்தமானில் உணரப்பட்டது
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!