ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10 மற்றும் 12ம் வகுப்பிற்கு இணையான கல்வி சான்றிதழ்: அரசாணை வெளியீடு
2022-05-18@ 00:05:24

சென்னை: ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10 மற்றும் 12ம் வகுப்பிற்கு இணையான கல்வி சான்றிதழ் வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடரின் போது, ‘‘ தொழிற்பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி முடித்துச் செல்லும் திறன் பெற்ற பயிற்சியாளர்கள் மேற்படிப்பினை தொடரும் பொருட்டு 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கு இணையான கல்விச் சான்றிதழ் தேவைப்படுகிறது. எனவே 8ம் வகுப்பு முறையாக பயின்று தொழிற்பயிற்சி நிலையங்களில் 2 ஆண்டுகள் தொழிற்பிரிவில் தேசிய தொழிற்சான்றிதழ் பெற்றவர்களுக்கும், 8ம் வகுப்பு முறையாக பயின்று தொழிற்பயிற்சி நிலையங்களில் ஓராண்டு தொழிற்பிரிவில் தேசிய தொழிற்சான்றிதழும் மற்றும் ஓராண்டு தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழும் ஒருங்கே பெற்றவர்களுக்கும் 10ம் வகுப்பிற்கு இணையான சான்றிதழும், 10ம் வகுப்பு முறையாக பயின்று தொழிற்பயிற்சியினை 2 ஆண்டுகள் தொழிற்பிரிவில் தேசிய தொழிற்சான்றிதழ் பெற்றவர்களுக்கும், 10ம் வகுப்பு முறையாக பயின்று தொழிற்பயிற்சி நிலையங்களில் ஓராண்டு தொழிற்பிரிவில் தேசிய தொழிற்சான்றிதழும் மற்றும் ஓராண்டு தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழும் ஒருங்கே பெற்றவர்களுக்கும் 12ம் வகுப்பிற்கு இணையான கல்விச் சான்றிதழும் பள்ளிக் கல்வித்துறை மூலம் வழங்கப்படும்’’ என்று அறிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10 மற்றும் 12ம் வகுப்பிற்கு இணையான கல்வி சான்றிதழ் வழங்க ஆணை வெளியிடப்படுகிறது. அதன்படி 8ம் வகுப்பு படித்து ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10ம் வகுப்பு முடித்ததற்கு இணையான சான்றும், 10ம் வகுப்பு முடித்து ஐடிஐ படித்தவர்களுக்கு 12ம் வகுப்பிற்கு இணையான கல்விச் சான்றிதழும் வழங்கப்படும். ஐடிஐ தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உயர்கல்வி பயில மட்டுமே இந்த இணை சான்றிதழ் பயன்படும். அரசு வேலைவாய்ப்புக்கு இணை சான்றிதழ் கருத்தில் கொள்ளப்படாது.
Tags:
ITI graduate 10th and 12th class equivalent education certificate Govt ஐடிஐ தேர்ச்சி பெற்றவர் 10 மற்றும் 12ம் வகுப்பிற்கு இணையான கல்வி சான்றிதழ் அரசாணைமேலும் செய்திகள்
முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு சுய தொழில் தொடங்க கடனுதவி; கலெக்டர் ஆர்த்தி தகவல்
தலித் கிறிஸ்தவர்கள் எஸ்சி பட்டியலில் சேர்க்க வேண்டும்
காஞ்சிபுரம் போக்குவரத்து மண்டலத்தில் முக்கிய வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும்; பொதுமக்கள் வலியுறுத்தல்
சர்வதேச செஸ் போட்டிக்காக அமைக்கப்பட்ட தற்காலிக டேபிள், அரங்குகள் பிரிக்கும் பணி தீவிரம்
மின் கட்டண உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரத்தில் மழைநீர் கால்வாய் ஆக்கிரமிப்பால் கழிவுநீர் குட்டையான ரங்கசாமி குளம் சீரமைக்க பொதுக்கள் கோரிக்கை
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!