உக்ரைன், ரஷ்யா போர் காரணமாக சமையல் எண்ணெய் விலை உயர்வு
2022-05-18@ 00:01:50

சென்னை: உக்ரைன், ரஷ்யா இடையே நடந்து வரும் கடும்போரினால், கோயம்பேடு மார்க்கெட்டில் சமையல் எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த விலை அதிகரிப்பால், வியாபாரம் சரிவர நடைப்பெறவில்லை என வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர். சென்னை கோயம்பேடு உணவு தானியம் மார்க்கெட்டில், ஒரு கிலோ சூரியகாந்தி எண்ணெய் கடந்த மாதம் ரூ.120க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று ரூ.70 அதிகரித்து, ரூ.190க்கு விற்கப்பட்டது. ஒரு கிலோ பாமாயில் ரூ.110லிருந்து ரூ.152க்கும், கடலை எண்ணெய் ரூ.140லிருந்து ரூ.182க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், ஒரு கிலோ நல்லெண்ணெய் ரூ.240லிருந்து, ரூ.280க்கும், ஒரு கிலோ டால்டா ரூ.120லிருந்து ரூ.160க்கும் விற்பனையாகிறது. இந்த விலை அதிகரிப்பு குறித்து, உணவு தானிய வணிகர்கள் சங்க பொருளாளர் அருண்குமார் கூறுகையில், ‘‘உக்ரைன், ரஷ்யா இடையே போர் மூன்று மாதமாக தொடர்ந்து நடந்துவருகிறது. இதனால், சூரியகாந்தி எண்ணெய், பாமாயில், நல்லெண்ணெய் போன்ற சமையல் எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இவ்விலை உயர்வால், வியாபாரம் சரியாக நடைப்பெறவில்லை. எனவே, வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கடும் வேதனை அடைந்துள்ளனர்’’ என்றார்.
மேலும் செய்திகள்
சென்னையில் தனியார் வங்கியில் கைவரிசை காட்டிய கொள்ளையர்களை கைது செய்யும் காவலர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு: டிஜிபி சைலேந்திரபாபு அறிவிப்பு
பிரபல செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணசுவாமி காலமானார்
ஓங்கூர் பாலம் சீரமைப்பு பணி, தொடர் விடுமுறை சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
தென் சென்னை கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உட்பட 5 அதிகாரிகளுக்கு முதல்வர் பதக்கம்
தாம்பரத்தில் ரூ.48 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் திறப்பு தமிழகம் சிறந்த மாநிலமாக திகழ்கிறது: ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் பேச்சு
தமிழகத்தில் நடந்த லோக் அதாலத்தில் 78 ஆயிரம் வழக்குகளில் தீர்வு: ரூ.440 கோடி பைசல்
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!