தமிழக- கர்நாடக மலைப்பாதையில் உலா வந்த காட்டு யானையால் பீதி
2022-05-17@ 18:12:51

சத்தியமங்கலம்: தமிழக- கர்நாடக மலைப்பாதையான தேசிய நெடுஞ்சாலையில் ஒற்றை காட்டு யானை உலா வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழகம்-கர்நாடகம் இரு மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. வனப்பகுதியில் வசிக்கும் காட்டு யானைகள் அவ்வப்போது தேசிய நெடுஞ்சாலையில் நடமாடுவதும், சாலையை கடந்து செல்வதும் வழக்கம்.
நேற்று மதியம் ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடியது. காட்டு யானை வாகனங்களை வழிமறித்து சாலையில் நடந்து செல்வதைக் கண்ட வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தினர். காட்டு யானை சிறிது நேரம் சாலையில் உலாவியபின் வனப்பகுதிக்குள் சென்றது. இதைத்தொடர்ந்து வாகன ஓட்டிகள் புறப்பட்டுச் சென்றனர். தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானை நடமாடியதால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் செய்திகள்
மூச்சு திணறல் நோயால் குழந்தை அவதி மகள்-மகனை கொன்று தாய் தூக்கிட்டு தற்கொலை: கரூர் அருகே சோகம்
பழநி முருகன் கோயிலில் எடப்பாடி பழனிசாமி திடீர் தரிசனம்
தொடர்ந்து 12 மணிநேரம் 1330 திருக்குறளுக்கேற்ப பரதநாட்டிய கலைஞர்கள் நடனமாடி சாதனை
ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி என்எல்சி ஊழியர் ரூ.27 லட்சம் மோசடி
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி: செல்லூர் ராஜூ அதிரடி
மின் சட்ட திருத்த மசோதா தாக்கலை கண்டித்து திருச்சியில் நகலை எரித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!