சோமாலியாவுக்கு மீண்டும் அமெரிக்க படைகளை அனுப்ப அதிபர் ஜோபிடன் உத்தரவு ... படைகளை திரும்பப் பெற்ற முன்னாள் அதிபர் டிரம்ப் ஆணை ரத்து!!
2022-05-17@ 09:48:29

வாஷிங்டன் : சோமாலியாவுக்கு மீண்டும் அமெரிக்க படைகளை அனுப்ப அமெரிக்க அதிபர் ஜோபிடன் உத்தரவிட்டுள்ளார். சோமாலியாவில் அல்கொய்தாவின் ஆதரவு அமைப்பான அல் ஷபாப் தீவிரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த பயங்கரவாத அமைப்பை ஒழிக்கும் நடவடிக்கையில் சோமாலியா அரசுகள் இணைந்து அமெரிக்க முன்னர் தீவிரமாக செயல்பட்டு வந்தது. இதற்காக சோமாலியாவில் நூற்றுக்கணக்கான அமெரிக்கப் படை வீரர்கள் குவிக்கப்பட்டு இருந்தனர்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக இருந்த டொனால்டு ட்ரம்ப், சோமாலியாவில் இருந்து அமெரிக்க படைகள் முழுவதையும் திரும்பப் பெற்றார். இந்த நிலையில் சோமாலியாவுக்கு மீண்டும் படைகளை அனுப்ப அமெரிக்க அதிபர் ஜோபிடன், உத்தரவிட்டுள்ளார். முதற்கட்டமாக 500 வீரர்களை சோமாலியாவுக்கு அனுப்பப்படலாம் என தெரிகிறது. அல் ஷபாப் தீவிரவாதிகளுக்கு எதிராக சோமாலியா படைகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்க படைகள் உறுதுணையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
மூளைக்காய்ச்சல் பாதிப்பால் அமெரிக்க நடிகை மரணம்
உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 59.46 கோடியை தாண்டியது.! 64.53 லட்சம் பேர் உயிரிழப்பு
20 நொடிகளில் 15 முறை குத்திக்குத்து சல்மான் ருஷ்டிக்கு செயற்கை சுவாசம்: கண்பார்வை, பேச்சு பறிபோகும் அபாயம்
டிரம்ப் பங்களாவில் 11 ரகசிய ஆவணம்: எப்பிஐ சோதனையில் சிக்கின
முதல் முறையாக இந்தியாவில் பயிற்சிக்கு பாக். ராணுவம் வருகை
இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி சீன உளவு கப்பலுக்கு இலங்கை அனுமதி: தென் மாநிலங்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!