சட்டம் ஒழுங்கில் தமிழகம் சிறப்பாக உள்ளது: பாலகிருஷ்ணன் பாராட்டு
2022-05-17@ 00:15:30

விழுப்புரம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மண்டல செயல் விளக்க கூட்டம், விழுப்புரத்தில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் அளித்த பேட்டி: தமிழகத்தில் ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் நூல்விலை உயர்வை கண்டித்து 2 நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ரூ.35 ஆயிரத்திற்கு விற்பனையான நூல் தற்போது ரூ.1 லட்சத்திற்கு விற்கப்படுகிறது. இதனால், தொழிலாளிகள் மட்டுமின்றி முதலாளிகளும் இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதற்கு காரணம் ஒன்றிய அரசு பெரிய முதலாளிகளுக்கு பஞ்சுகளை, நூல்களை விற்பனை செய்வதே. ஒன்றிய அரசு விற்பனை, ஏற்றுமதிகளை கண்காணித்திடவும், நெறிமுறைப்படுத்திடவும் வேண்டும். தமிழக அரசியல் களத்தில் அதிமுக இனிவரும் காலங்களில் காணாமல் போகும். திமுக ஆட்சியின் ஓராண்டு சாதனைகளை அனைவரும் பாராட்டி வருகின்றனர். சட்டம் ஒழுங்கிலும் தமிழகம் சிறப்பாக உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். அப்போது, ஒரு போலீஸ்காரர் மீது கூட நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போதைய ஆட்சியில், சென்னை காவல் நிலையத்தில் விசாரணை கைதி உயிரிழந்த சம்பவத்தில் 3 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
Tags:
In law and order Tamil Nadu Balakrishnan praise சட்டம் ஒழுங்கில் தமிழகம் பாலகிருஷ்ணன் பாராட்டுமேலும் செய்திகள்
மூட நம்பிக்கைகளை பற்றி பேசி கண்ணியத்தை குறைக்காதீர்கள்: மோடிக்கு ராகுல் பதிலடி
சிங்கங்களுடன் மோதும் நாய்: நிதிஷ் குமார் மீது மறைமுக தாக்குதல்
சொல்லிட்டாங்க...
பாஜக ஆட்சியில் இந்திய ஜனநாயகம் கடுமையான நெருக்கடியில் உள்ளது: கே.எஸ். அழகிரி
ரூ.8625 கோடி மோசடி செய்த 3 நிதி நிறுவனங்களின் சொத்துகளை அரசு முடக்க வேண்டும்: பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் வலியுறுத்தல்
பீகாரில் நிதிஷ்குமார் எடுத்தது புத்திசாலித்தனமான முடிவு: தேசியவாத காங். தலைவர் சரத்பவார் பேட்டி
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!