நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் 2 நாள் வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது: நாளொன்றுக்கு ரூ.360 கோடி இழப்பு அபாயம்
2022-05-16@ 08:32:15

திருப்பூர்: நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் 2 நாள் வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது. பின்னலாடை தொழில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாள் வேலைநிறுத்தம் நடத்தபப்டுகிறது. திருப்பூரில் 10,000 பின்னலாடை நிறுவனங்கள், அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளன. நூல் விலை உயர்வால் திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிருவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக நூல் விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில் இம்மாதம் கிலோ ரூ.40 உயர்ந்தது.
பஞ்சு விலை ஒரே ஆண்டில் 2 மடங்கு உயர்ந்து ஒரு கேண்டி ரூ.1 லட்சமாக அதிகரித்துள்ளது. வரலாறு காணாத வகையில் பஞ்சு விலையும் உயர்ந்து இருப்பதால் நூல் விலை மீண்டும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நூல் விலையை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பின்னலாடை நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளன. நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், பருத்தி பதுக்கலை கண்டருந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் ஸ்டிரைக்கால் நாளொன்றுக்கு ரூ.360 கோடி வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பருத்தி, நூல் ஏற்றுமதியை ஒன்றிய அரசு ரத்து செய்து உள்நாட்டு உற்பத்திக்கு பயன்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். கோவை, கரூர், ஈரோடு, சேலம், பகுதிகளிலும் ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் செய்திகள்
அம்பானி, அதானிகளுக்கு ஆதரவாக செயல்படும் ஒன்றிய அரசு: டி.ராஜா தாக்கு
மூச்சு திணறல் நோயால் குழந்தை அவதி மகள்-மகனை கொன்று தாய் தூக்கிட்டு தற்கொலை: கரூர் அருகே சோகம்
பழநி முருகன் கோயிலில் எடப்பாடி பழனிசாமி திடீர் தரிசனம்
தொடர்ந்து 12 மணிநேரம் 1330 திருக்குறளுக்கேற்ப பரதநாட்டிய கலைஞர்கள் நடனமாடி சாதனை
ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி என்எல்சி ஊழியர் ரூ.27 லட்சம் மோசடி
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி: செல்லூர் ராஜூ அதிரடி
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!