25 ஆண்டுகளாக பாமக தலைவர் ஜி.கே.மணிக்கு பாராட்டு விழா ராமதாஸ் அறிவிப்பு
2022-05-16@ 00:38:32

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் அவரது கட்சியினருக்கு எழுதியுள்ள கடிதம்: பாமக தலைவராக ஜி.கே.மணி பொறுப்பேற்று 25 ஆண்டுகள் ஆகிறது. எனவே, அவருக்கு பாராட்டு விழா நடத்தப்படவிருக்கிறது. ஜி.கே.மணி அரசியலுக்கு வருவதற்கு முன் அடிப்படையில் ஓர் ஆசிரியர். பாமக தொடங்குவதற்கு முன்பாகவே நமக்கு கிடைத்த முதல் மக்கள் பிரதிநிதி என்ற பெருமையும் மணிக்கு உண்டு. கலைஞர், எம்.ஜி.ஆரில் தொடங்கி இன்று மு.க.ஸ்டாலின் வரை கடந்த 50 ஆண்டுகளில் தமிழக முதலமைச்சராக இருந்த அனைத்து தலைவர்களுடனும் ஜி.கே. மணிக்கு அறிமுகம் உண்டு. பாமக தலைவர் பதவியில் ஜி.கே.மணியின் வெள்ளிவிழா ஆண்டை கொண்டாடும் வகையில், வரும் 24ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு சென்னை சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் உள்ள அண்ணா அரங்கத்தில் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்படவிருக்கிறது.
Tags:
25th Anniversary Bamaga Leader GK Mani Appreciation Ceremony Ramadas 25 ஆண்டு பாமக தலைவர் ஜி.கே.மணி பாராட்டு விழா ராமதாஸ்மேலும் செய்திகள்
அதிமுகவுக்கு நல்ல நீதி கிடைத்துள்ளது தனி நபருக்கு கட்சியை கொண்டு செல்ல நினைத்தால் அது நடக்காது: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
சொல்லிட்டாங்க...
இமாச்சலத்தில் 2 காங். எம்எல்ஏ பாஜ.வுக்கு தாவல்
ஜம்மு காஷ்மீர் காங். பிரசார குழு தலைவர் சோனியா வழங்கிய பதவியை நிராகரித்தார் குலாம் நபி ஆசாத்: அவமானப்படுத்துவதாக குற்றச்சாட்டு
தேதி நெருங்குவதால் பரபரப்பு காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியா?...
89வது பிறந்த நாளை முன்னிட்டு முரசொலி மாறன் சிலைக்கு துரைமுருகன் அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை: தமிழகம் முழுவதும் நிர்வாகிகள் மலரஞ்சலி
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...
பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் லாரியும், பயணிகள் பேருந்தும் மோதி தீ விபத்து.. 20 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!!
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!