பீகாரில் முதல்வர் ஆய்வு செய்துவிட்டு சென்ற சிலமணி நேரத்தில் உடைந்த ஆற்றங்கரை; ஊருக்குள் தண்ணீர் புகுந்தது..!!
2022-05-14@ 11:55:58

சிதாமார்ஹி: பீகார் மாநிலத்தில் முதலமைச்சர் நிதிஷ்குமார் ஆய்வு செய்துவிட்டு சென்ற சிலமணி நேரத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் ஆற்றங்கரை உடைந்ததால் ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. சிதாமார்ஹி மாவட்டத்தில் 40 ஆண்டுகளுக்கு பின்னர் லவாஹே ஆற்றில் பழைய நீர் வழித்தடத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கிய 3 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பழைய நீர்வழி தடத்தில் நடைபெற்று வரும் பணிகளை நேற்று ஆய்வு மேற்கொண்ட நிதிஷ்குமார், நீரை திறந்துவிட உத்தரவிட்டார்.
இதனையடுத்து ஆய்வை முடித்துக்கொண்டு அவர் சென்ற சிறிது நேரத்தில் ஆற்றங்கரை உடைந்ததால் ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. நீர்வழித்தடத்தை சீரமைப்பதன் வாயிலாக அருகில் உள்ள கிராமங்களின் நீர் தேவையை பூர்த்தி செய்ய இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல்வர் ஆய்வு செய்துவிட்டு சென்ற சிறிது நேரத்தில் கரை உடைந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்
தவறுதலாக எல்லை தாண்டிய குழந்தை: பாக். வீரர்களிடம் ஒப்படைப்பு
வெளிநாடுகளை சேர்ந்தவர்களிடம் இருந்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ரூ.10 லட்சம் வரை நன்கொடை பெறலாம்: எப்சிஆர்ஏ சட்டத்தில் ஒன்றிய அரசு திருத்தம்
6 நாட்களுக்கு முன்பே தென்மேற்கு பருவமழை நாடு முழுதும் துவங்கியது
சுயநலத்துக்காக பயன்படுத்த பார்க்கும் அரசியல் கட்சிகள் அரசியல் சட்டத்துக்கு மட்டுமே உச்ச நீதிமன்றம் பதில் சொல்லும்: தலைமை நீதிபதி என்வி.ரமணா காட்டம்
பயணிகள் அலறல் 5000 அடி உயரத்தில் விமானத்தில் புகை: 15 நாளில் 5வது சம்பவம்
முதல்வர் பைரன் சிங் அதிர்ச்சி தகவல் மணிப்பூர் நிலச்சரிவில் சிக்கிய 80 பேரும் பலி: சடலங்கள் மட்டுமே மீட்பு
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்