பெரும்பாக்கம் திட்டப்பகுதியில் நவீன தொழில்நுட்பத்துடன் 1,152 அடுக்குமாடி குடியிருப்புகள்: நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் தகவல்
2022-05-14@ 00:11:07

சென்னை: பெரும்பாக்கம் திட்டப் பகுதியில் ₹116.37 கோடியில் 1152 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணியை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குனர் கோவிந்தராவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் கோவிந்த ராவ் பெரும்பாக்கம் திட்டப்பகுதியில் ₹116.37 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 1152 அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இது தொடர்பாக தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வெளியிட்ட அறிக்கை: பெரும்பாக்கம் திட்டப் பகுதியில் மேற்கொள்ளப்படும் இந்த பணிகள் ₹116.37 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்டுருவாக்க கான்கிரீட் கட்டுமான தொழில்நுட்ப முறையினை கடைபிடித்து கட்ட கட்டுமான நிறுவனத்திற்கு பணி ஆணை வழங்கப்பட்டது.
தற்போது இக்கட்டுமான பணிகள் அனைத்து விதத்திலும் முடிவுற்று, திட்டப் பகுதிகளில் உள்சாலைகள், மின்விளக்குகள், மின்சார இணைப்பு, குடிநீர் வழங்கல், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், அங்கன்வாடி, சிறு கடைகள், நியாயவிலை கடைகள், நூலகம், பாலகம். திடக்கழிவு மேலாண்மை போன்ற கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்திட்ட பயனாளிகளுக்கு குடிநீர் வழங்குவதற்கான பணிகள் முடிவுற்று குடிநீர் சோதனை பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்திற்காக தனியாக ஒரு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. குடியிருப்பிற்கான மின்சார இணைப்பு பணிகள் தமிழ்நாடு மின்சார வாரியத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இப்பணிகள் வருகிற 16ம் தேதி நிறைவு பெறும்.
மேலும் செய்திகள்
செஸ் ஒலிம்பியாட் தொடரின் 10வது சுற்று போட்டிகள் தொடங்கின: பதக்க வாய்ப்பை உறுதி செய்யுமா இந்திய அணி?
அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு.: ஆக.10-ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைப்பு
கோட்டூர்புரம் நூலகத்தை மாற்ற இடைக்கால தடை விதித்தது ஏன்?: ஓய்வு நீதிபதி சந்துரு பரபரப்பு
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய கோரி அரசு அறிவித்த மின்னஞ்சலில் தமாகாவினர் பதிவிட வேண்டும்: ஜி.கே.வாசன் வேண்டுகோள்
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை மாலை செஸ் ஒலிம்பியாட் போட்டி பிரமாண்ட நிறைவு விழா
சென்னை ஆலந்தூரில் பேருந்து மோதி பெயர் பலகை விழுந்து விபத்து.: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் மற்றும் ரூ.3 லட்சம் நிதியுதவி
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!