ஏரியை ஆக்கிரமித்து பயிரிடப்பட்டிருந்த கரும்பு பயிர்கள் அகற்றம்-வருவாய் துறை நடவடிக்கை
2022-05-13@ 13:54:42

மேல்மலையனூர் : விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகாவுக்குட்பட்ட நாரணமங்கலம் கிராமத்தில் ஏரி நீர்பிடிப்பு பகுதியில் அதே கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தனர். இந்நிலையில் நீர்பிடிப்பு பகுதியினை ஆக்கிரமித்து பயிரிடப்பட்டிருந்த கரும்பு ,நெற்பயிர் உள்ளிட்டவற்றை மாவட்ட ஆட்சியர் மோகன் உத்தரவின் பேரில் வட்டாட்சியர் கோவர்தனன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கனகராஜ் மற்றும் காவல்துறையினர் அகற்றினர். ஏரி பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த இரண்டு வீடுகள் மற்றும் 33 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு பயிரை வருவாய் துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் அழித்து ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
கோவை நகைக்கடையில் ரூ.55 லட்சம் நகை மோசடி ‘ஆன்லைன் ரம்மி’யில் இழந்த சூபர்வைசரிடம் விசாரணை
குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பரிந்துரைப்படி பள்ளிகளில் தொடர்ந்து தவறு செய்யும் மாணவர்களுக்கு நூதன தண்டனை; பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்
கி.மு. 300 முதல் 10-ம் நூற்றாண்டு வரையிலான பல்வேறு காலகட்டங்களில் உருவானது கீழடி நகரம்; மத்திய தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தகவல்
கருமுட்டை விவகாரத்தில் ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு ‘சீல்’
பலகோடி மோசடி செய்த உரிமையாளர்கள் தலைமறைவு; ஐஎப்எஸ் நிதி நிறுவன ஏஜென்ட் தற்கொலை காட்பாடி அருகே சோகம்
1.30 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு காவிரி ஆற்றில் தொடரும் வெள்ளப்பெருக்கு
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!