இஸ்ரேலில் பெண் செய்தியாளர் சுட்டுக் கொலை..சர்வதேச பத்திரிகையாளர்கள் பலர் இரங்கல்.!
2022-05-12@ 15:13:41

இஸ்ரேல்: அல் ஜசிரா செய்தி நிறுவனத்தின் பெண் செய்தியாளராக பணியாற்றி வந்த ஷிரீன் அபு அக்லே மறைவுக்கு சர்வதேச பத்திரிகையாளர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே மேற்குகரை பகுதி, ஜெருசலேம் நகரம் யாருக்குச் சொந்தம் என்பதில் மோதல் நீடிக்கிறது. இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள அப்பகுதிகளில் இன்னமும் பல லட்சம் பாலஸ்தீனர்கள் வாழ்ந்து வருகின்றனர். இஸ்ரேல் ஆக்கிரமிப்பை எதிர்த்து இவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.பாலஸ்தீன பயங்கரவாதிகளை களையெடுப்பதாக கூறி மேற்குகரை பகுதியில் இஸ்ரேல் வீரர்கள் அடிக்கடி தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர்.
இந்த தேடுதல் வேட்டைகளில் அப்பாவி பாலஸ்தீன மக்கள் சுட்டுக்கொல்லப்படுவது தொடர்கதையாகி வருகிறது.இந்நிலையில், மேற்குகரை பகுதியில் ஜெனின் நகரில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாமுக்குள் நேற்று காலை இஸ்ரேல் ராணுவ வீரர்கள் அதிரடியாக நுழைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.பாலஸ்தீன அகதிகள் முகாமில் இஸ்ரேல் ராணுவ வீரர்களின் தேடுதல் வேட்டை குறித்து செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டதாக கத்தார் நாட்டின் அரசு செய்தி சேனலான அல் ஜசிரா தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகள்
சீனாவில் புதிய வைரஸ் லங்யா: 35 பேர் பாதிப்பு
இலங்கை, பாகிஸ்தானை தொடர்ந்து சீனாவின் வலையில் சிக்கியது நேபாளம்: ரூ.1,500 கோடி கடன் உதவி
22ஏ சட்டத் திருத்தத்தில் மாற்றம் பிரதமர், அமைச்சர்களை அதிபரால் நீக்க முடியாது: இலங்கை அமைச்சர் தகவல்
சீன தூதரை அழைத்து இங்கிலாந்து கண்டிப்பு
நீல வில்லை விருது நவ்ரோஜியின் லண்டன் வீட்டுக்கு சிறப்பு கவுரவம்
இந்திய தீர்மானத்துக்கு சீனா முட்டுக்கட்டை
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!