அசானி புயல் எதிரொலி வேதாரண்யத்தில் கடல் சீற்றம் 3வது நாளாக மீனவர்கள் முடக்கம்
2022-05-11@ 18:19:38

திருச்சி: வங்க கடலில் மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய பகுதியில் நிலவிய தீவிர புயலான அசானி, நேற்று வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் நகர்ந்து வட ஆந்திரா- ஒடிசா கடற்கரையை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிக்கு வந்தது. இதற்கிடையே தீவிர தன்மை குறைந்து புயலாக மாறியது. அசானி புயலால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. நேற்று மாலை முதல் நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சை, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி மாவட்டங்களில் வானில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது. நாகை மாவட்டத்தில் இன்று 3வது நாளாக பைபர் படகு மீனவர்கள் 3,000 பேர், கடலுக்கு செல்லவில்லை. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நாகை துறைமுகம், காரைக்கால் தனியார் துறைமுகத்தில் இன்று 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்தது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா ஆறுகாட்டுத்துறை, மணியன்தீவு, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் ஆகிய மீனவ கிராமங்களில் நேற்று திடீரென கடல் சீற்றம் ஏற்பட்டு கடல்நீர் 200 மீட்டர் வரை கரையை நோக்கி வந்தது. இதனால் பொதுமக்கள் அச்சத்துக்கு ஆளாகினர். இன்று காலையும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இன்று காலை நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் வெயில் அடித்தது. திருச்சி, தஞ்சை, பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் வானில் கருமேகங்கள் திரண்டு பலத்த காற்று வீசியது. கோடை வெயில் அடிக்காமல் ரம்மியமாக குளிர்ந்த காற்று வீசியது.
மேலும் செய்திகள்
12 அடி அகலம், 32 அடி நீள தேசிய கொடி உருவாக்கி மழலையர் பள்ளி குழந்தைகள் சாதனை
விடுதியில் பிளஸ் 2 மாணவன் தற்கொலை சிபிசிஐடி விசாரணைக்கு வழக்கு மாற்றம்: ஊத்தங்கரையில் போலீஸ் குவிப்பு
திருத்தணி அருகே வீடுகள் இடிப்பை கண்டித்து பொது மக்கள் மறியல்: வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ சமரசம்
உத்திரமேரூரில் ரூ.21 லட்சம் மதிப்பில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம்; சுந்தர் எம்எல்ஏ திறந்து வைத்தார்
அடிப்படை வசதிகளை செய்து தர கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து மக்கள் மறியல்; கும்மிடிப்பூண்டி அருகே பரபரப்பு
இலவச கால்நடை மருத்துவமுகாம்
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!