பிரதம மந்திரி வீடு கட்டும் திட்ட பயனாளியிடம் ரூ.10ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலர் கைது: திருவாரூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி
2022-05-11@ 00:37:27

திருவாரூர்: பிரதம மந்திரி வீடு கட்டும் திட்ட பயனாளியிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலரை திருவாரூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஊராட்சி ஒன்றியம் விக்கிரபாண்டியம் கிராமத்தை சேர்ந்தவர் குமார் (39). இவர், ஒன்றிய அரசின் பிரதம மந்திரி அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தனது மனைவி ஜோஸ்பின் மேரியின் பெயரில் வீடு கட்டுவதற்காக ஊராட்சி மன்ற மூலம் அனுமதி பெற்றுள்ளார். இதில் முதல் தவணை தொகையை தனக்கு ஒதுக்கும்படி ஊராட்சி செயலர் குமாரிடம் (42) கேட்டுள்ளார். அதற்கு அவர், ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத பயனாளி குமார், இதுதொடர்பாக திருவாரூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் அறிவுறுத்தலின்படி, ரசாயனம் தடவிய ரூ.10ஆயிரத்தை ஊராட்சி செயலரிடம் வழங்குவதற்காக நேற்று மதியம் அலுவலகத்திற்கு பயனாளி குமார் சென்றார். அங்கு அலுவலகத்தில் இருந்த ஊராட்சி செயலரிடம் ரூ.10 ஆயிரத்தை வழங்கினார். அப்போது அங்கு மறைந்து இருந்த டிஎஸ்பி நந்தகோபால் தலைமையிலான போலீசார், அலுவலகத்திற்குள் புகுந்து ஊராட்சி செயலர் குமாரை கையும் களவுமாக பிடித்து அதிரடியாக கைது செய்தனர்.
மேலும் செய்திகள்
உத்திரமேரூர் அருகே அம்மன் கோயில்களில் கூழ்வார்த்தல் திருவிழா; பக்தர்கள் அலகு குத்தி வழிபாடு
மருத்துவான்பாடி கிராமத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய விளையாட்டுத்திடல்; கிராம சபை கூட்டத்தில் இளைஞர்கள் கோரிக்கை
வாரணவாசி ஊராட்சியில் கலைஞரின் வெண்கலை சிலை; கிராம சபையில் தீர்மானம்
குடிபோதை தகராறில் விபரீதம்; மாமாவை கம்பியால் அடித்து கொன்ற மைத்துனர் கைது
கோயிலுக்கு சென்று திரும்பியபோது சோகம், மரத்தில் கார் மோதி பயங்கர விபத்து தெலுங்கு குறும்பட தயாரிப்பாளர் பலி; குடும்பத்தினர் 5 பேர் படுகாயம்
மாற்று இடம் வழங்க வலியுறுத்தி கோட்டாட்சியர்; அலுவலகத்தை நரிக்குறவர்கள் திடீர் முற்றுகை
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!